Latest News

May 20, 2013

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களை மீண்டும் விசாரணைக்கு அழைப்பு
by admin - 0

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொதுச் செயலாளர் உட் பட்ட 4பேர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று மீளவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக
கட்சியின் யாழ்.வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 18ம் திகதி மன்னாரில் நடைபெற்ற
முள்ளிவாய்க்கால் தமிழின
அழிப்பு நினைவு நாள் நிகழ்வில்
கலந்துகொண்டிருந்த சமயம் முன்னணியின்
பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன்,
சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் இளைஞரணி தலைவர் எஸ்.சத்தியசீலன் உட்பட 15பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளின்
பின்னர் நள்ளிரவு விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் முன்னணியின் உபதலைவர்
சி.கஜேந்திரகுமார், மற்றும் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.வசந்தரூபன் ஆகியோர் இன்று காலை 9மணிக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மதியம் 2மணிவரை கடுமையான
விசாரணைகுட்படுத்தப்பட்டுள்ளதுடன்,
யாழ்ப்பாணத்தில் 2மணிக்கு விசாரணைக்கு வருமாறு கட்சியின் பொதுச் செயலாளர் செ. கஜேந்திரன், மற்றும் இளைஞரணி தலைவர் எஸ்.சத்தியசீலன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு தற்போது விசா
நடைபெற்று வருகின்றது.
« PREV
NEXT »

No comments