Latest News

May 12, 2013

தாய்லாந்து சிறையில் 7 ஆவது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் கங்காதரன்!
by admin - 0

ஈழத்தமிழ் அகதியான திரு.ஆர்.கங்காதரன் அவர்கள் தாய்லாந்திலுள்ள UNHCR எனப்படும் அகதிகளுக்கான ஐ.நா உயர்ஸ்த்தானிகராலயத்தினால் அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ள நிலையில் உரிய வீசா அனுமதியின்றி தங்கியிருந்தார் என்ற காரணத்தினால் தாய்லாந்து குடிவரவு அதிகாரிகளினால் கைது செய்யபட்டு சுமார் 3 வருடகாலமாக சிறையில் வாழுகின்றார்.

அவரோடு சேர்த்து அவரின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் சிறையில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

அவர் கடந்த 5ம் திகதிமுதல் தொடர்ச்சியாக ஏழாவது நாளாக உண்ணாவிரதமிருந்து வருகின்றார்.

இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் நடாத்தும் ஆர்.கங்காதரன் அவர்கள் தனது போராட்டம் சம்பந்தமாக அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மனித உரிமை ஆர்வலர்கள், மனிதாபிமானப்பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அவருக்கு உதவ முன்வாருங்கள் என்று கங்காதரன் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- அகரன் -

அவர் எழுதியுள்ள கடிதம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது,
« PREV
NEXT »

No comments