Latest News

May 09, 2013

25 வருடங்களின் பின் தெஹிவளையில் வெளிநாட்டு சிங்கம்
by admin - 0

விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் தென் கொரிய சோல் விலங்குகள் சரணாலயத்தில் இருந்து சிங்கம் ஒன்று இன்று (09) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணியளவில் தெஹிவளை விலங்குகள் சரணாலயத்திற்கு இந்த சிங்கம் கொண்டுவரப்பட்டதாக தெஹிவளை சரணாலயத்தின் அதிகாரி நிஹால் செனரத் தெரிவித்தார்.

சுமார் 25 வருடங்களின் பின் தெஹிவளை சரணாலயத்திற்கு சிங்கம் ஒன்று வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டினார்.

தெஹிவளை சரணாலயத்தில் தற்போது 7 சிங்கங்கள் உள்ள நிலையில் அவை அனைத்தும் 15 வயதுக்கும் மேற்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது.
« PREV
NEXT »

No comments