Latest News

April 25, 2013

தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு ஒரு வரலாற்றுக் கடமை! -பிரான்ஸ் தமிழர் நடுவம்
by admin - 0

விடுதலைப் போராட்டத்தின்
தொடர்ச்சி, அனைத்துலக
அங்கீகாரம் நோக்கிய திசைவழியே நகர்ந்து செல்கின்றது.
அனைத்துலக சமூகத்தின்
தவிர்க்கப்படமுடியாத ஒரு அங்கமாகவும்,
தென்னாசியப் பிராந்தியத்தின் ஒரு புதிய
பிறப்பாகவும் மலரப்போகும் தமிழீழத்தின்,
உள்ளார்ந்த கொள்கைகள் என்ன? அதன் கோட்பாடுகள் யாவை? அனைத்துலக,
பிராந்திய யதார்த்தங்களுடன் தமிழீழம்
தன்னை எப்படி இனம்காட்டப்போகின்றது? அனைத்துலக மனித உரிமைச் சட்டங்கள்,
பொருளாதாரக் கொள்கைகள்,
மதவிவகாரங்கள், ஆட்சி அதிகாரங்களின்
தன்மைகள், இப்படியாக பல்வேறுபட்ட,
பெருவாரியான கேள்விகள், தோற்றம்பெற
இருக்கின்ற இந்தச் சின்னஞ்சிறிய தமிழீழ தேசம் குறித்த அனைத்துலகத்தின் கவனத்தில்
பொதித்திருக்கின்றன. அனைத்துலகத்தின் ஆதரவையும்,
அங்கீகாரத்தையும், ஏதோ ஒரு வடிவத்தில்
அதன் தலையீட்டையும் கோரிநிற்கும் நாம்,
தமிழீழம் குறித்த, அதன்
உண்மை நிலைப்பாட்டை அனைத்துலக
சமூகத்திற்கு தெளிவாக விளக்கக் கடமைப்பட்டுள்ளோம். அதனை, சனநாயக
வழிமுறை மூலம், உலகெங்கும் பரந்துவாழும்
தமிழ் மக்களின் கருத்துக்களை உள்வாங்கி,
ஒரு வலுவான ஆவணமாக்கி, அனைத்துலக
சமூகத்தின்
கவனத்திற்கு கொண்டுவருவது எமது முக்கிய வரலாற்றுப் பணியாகின்றது. எமது தேசிய விடுதலைப் போராட்டம்
தாயகத்தில் அரசியல் போராட்டமாக
முகிழ்ந்து, ஆயுதப்போராட்டமாக
பெருவளர்ச்சிகண்டு வலுப்பெற்று,
வடிவமாற்றம்பெற்று இன்று, அனைத்துலக
அரங்கில், அரசியல் மற்றும் இராஜரீக வழிகளில் முன்னோக்கி நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கி அனைத்துலக சமூகத்தின் முன்னால்,
எமது தேசிய இலக்கை முன்வைக்கும்
அதேவேளை, அதன் உள்ளீடு குறித்த
அனைத்துலகத்தின், சந்தேகங்களைப்
போக்கவேண்டியவர்களாகவும் உள்ளோம். அனைத்துலக சமூகத்தால் நிராகரிக்க முடியாத
தளத்தில் நின்றுகொண்டு,
திட்டமிட்டமுறையில் போலியான
முத்திரை குத்தி ஒதுக்கிவைக்கப்படமுடியாத
ஒரு யதார்த்த வடிவத்தை எடுத்துக்கொண்டு,
எமக்கான விடுதலையை பெற தொடர்ந்து போராடுவதே அறிவுபூர்வமான
அணுகுமுறை. தாயகத்தில் எமது போராட்டத்தின்
அடித்தளங்களாக வரையறுக்கப்பட்ட தேசியக்
கொள்கைகளை,
அத்திவாரங்களாகக்கொண்டு, அனைத்துலக
யதார்த்தங்களுக்கு ஏற்ப, அனைத்துலகத்தின்
நவீன அரசியல், இராஜரீக, பொருளாதார உறவுப்போக்கிற்கு ஈடுகொடுக்கும்
வகையில், எமது தேசிய
விடுதலை வேட்கையை, தமிழீழ சுதந்திர
சாசனம் என்ற ஆவணமாக உருவாக்கவேண்டும். நாடுகடந்த தமிழீழ அரசு, இந்த
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
பெரும்கடமையை ஆற்றும் பணியில்,
மிகத்தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. தமிழர்
நடுவத்தினராகிய நாமும், இத்தேசியப் பணியில்
உளப்பூர்வமாக கைகோர்க்கின்றோம். அத்துடன், இந்தப் பணியின்
முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டு,
சமூக அமைப்புக்கள், சங்கங்கள், இந்தப்
பணிக்கு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்க
முன்வரவேண்டும் என்று தாழ்மையாகக்
கேட்டுக்கொள்கின்றோம். எமது மக்களின் விடுதலை குறித்து, உண்மையான
அக்கறை கொள்பவர்கள், இந்தப் போராட்;டக்
களத்தை நிராகரிக்கமாட்டார்கள்
என்றே நம்புகின்றோம். இவை காலம் எமக்குத்
தந்த வாய்ப்புகள் பயன்படுத்துவோம்
வாருங்கள். விழ விழ எழுவோம் என்பது, யாருக்குப்
பொருந்துகின்றதோ இல்லையோ, தமிழீழ
மக்களாகிய எமக்கு மிகப்பொருத்தமாக
அமைகின்றது. முள்ளிவாய்க்காலில்,
ஒன்றரை இலட்சம் மக்களை,
கொன்று குவித்து, வெறியாட்டம் ஆடிய பௌத்த சிங்கள இனவெறி அரசு, யாவும்
முடிந்ததென, வெற்றிக்கொண்டாட்டம்
நடத்தும் காலத்தே, தமிழீழ மக்கள்,
தமது சுதந்திர சாசனத்தை முரசறையப்
போகின்றார்கள். மீண்டும் தொடங்கும்
மிடுக்கு என முரசறையப்போகின்றார்கள். வெட்டச் சரியோம் தளைப்போம் என,
சிங்களத்தின் கனவு கலைக்கப்போகின்றார்கள். விடுதலை என்ற தமது தேசிய
இலக்கு நோக்கி, தமிழீழ மக்கள், புதிய
தளத்தில் புதிய வடிவில், தேசியத் தலைவரின்
பெயரை உச்சரித்தபடி, மாவீரர்களின்
நினைவழியா நினைவுகளைத் தாங்கியபடி,
புறப்பட்டுவிட்டார்கள். எல்லோரும் கைகோர்ப்போம். தேசத்தின்
விடுதலை என்ற எங்கள் மாவீரர்களின் கனவைக்
காப்போம். தாயகத்தை மீட்போம் என பிரான்ஸ்
தமிழர் நடுவம் அறிக்கைஇ
ஒன்றினை வெளியிட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments