யாழ்.பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் இலக்கத்தகடு அற்ற மோட்டர் சைக்கிளில் வந்தவர்கள் தங்களை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கோரினர். இருந்தும் உள்ளே அனுமதிக்க முடியாது என அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அவர்கள் உடனே சென்று விட்டார்கள். பின்னர் அவர்கள் ஏதே வகையில் மதில் சுவற்றில் ஏறிக் குதித்து உள்ளே வந்து தொழுகை அறைக்கு சென்று கழிவு ஒயிலை வீசிச் சென்றன்றுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடம் தாங்கள் தெரிவித்தாகவும், இது தொடர்பில் தாங்கள் பார்த்துக் கொள்வதாக நிர்வாகத்தினர் தெரிவித்தாக யாழ்.பல்கலைக்கழக பாதுகாப்பு பிரிவினர் கூறினர்.
யாழ்.பல்கலைக்கழகத்தை மாவீரர் தினத்திலிருந்து அரச புலனாய்வுப் பிரிவினர் தங்களது கண்காணிப்பு வலைமைப்புக்குள் கொண்டு வந்துள்ளதுடன் பல்கலைக்கழகத்திற்கு அருகில் தனியார் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மிகவும் அவதானமாக அவதானித்து வருவதாக தெரியவருகின்றது.
No comments
Post a Comment