HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
April 13, 2013
வலைத்தளங்களை வளைக்க முடியாது! -நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்
வலைப்பதிவர்கள்!
by
admin
03:13:00
-
0
வருகின்ற மக்களவைத் தேர்தலில் சமூக வலைத்தளங்களின் பங்களிப்பு குறித்து ஐ.ஆர்.ஐ.எஸ். நாலெட்ஜ் ஃபவுண்டேஷன் மற்றும் இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசிசியேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டன. ஆய்வின் முடிவில், மொத்தம் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 160 தொகுதிகளில் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கின்ற சக்தியாக வலைத்தளங்கள் இருக்கக் கூடும் என்று தெரிய வந்திருக்கிறது. மகாராஷ்டிராவில் 21 தொகுதிகளிலும், குஜராத்தில் 17 தொகுதிகளிலும் சமூக வலைத்தளங்களின் தாக்கம் இருக்கலாம். தமிழகம், ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் முறையே 12, 11 மற்றும் 10 தொகுதிகளில் இதன் தாக்கம் இருக்கக்கூடும் என்று அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. அரசுக்கு நெருக்கடி தரும் வகையில், முக்கியப் பிரச்னைகளில் சமூக வலைத்தளங்களும் இணைய ஆர்வலர்களும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருவது நாம் அறிந்த ஒன்றே. அண்ணா ஹஜாரே போராட்டம், இலங்கைத் தமிழர் பிரச்னை, டெல்லி பாலியல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளும் கவனத்தை ஈர்த்ததற்கு சமூக வலைத்தளப் பதிவர்களே மிக முக்கிய காரணமாக இருந்திருக்கின்றனர். தமிழகத்தில் தமிழீழத்துக்கு ஆதரவான மாணவர் போராட்டம் பெற்ற வெற்றியின் பின்னணியிலும் இந்த வலைத்தளங்கள் இருக்கின்றன. ரேடியோ, சேனல்கள், நாளிதழ்கள், வாரப் பத்திரிக்கைகள் என ஊடகங்களைத் தாண்டி, சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் இடும் வலைப் பதிவுகள் பெற்று வரும் முக்கியத்துவம் பிரம்மிக்க வைக்கிறது. “தமிழகத்தில் உள்ள 12 நாடாளுமன்றத் தொகுதிகளின் வெற்றி தோல்வியை வலைத்தளங்கள் தீர்மானிக்கப் போகின்றன என்று ஆய்வு கூறுகிறது. அரசியல் கட்சிகளே! வழக்குகளைப் போட்டு மிரட்டுவதை விடுத்து, வலைப்பதிவர்களை மரியாதையோடு நடத்தப் பாருங்கள்! அவர்கள் சுட்டிக்காட்டும் குறைகளை நிவர்த்தி செய்யப் பாருங்கள். இல்லையென்றால் நஷ்டம் உங்களுக்குத்தான்..” என்கிறார் பாலகணேஷ் தன் முகநூல் நட்பு வட்டத்தில். அட, கம்ப்யூட்டரைத் தட்டியே தேர்தலில் புரட்சி பண்ணப் போறாங்களாக்கும்.. -சி.என்.இராமகிருஷ்ணன்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment