Latest News

April 11, 2013

சிரியாவில் ராணுவம் அதிரடி தாக்குதல்: 57 பேர் பலி
by admin - 0

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். அதிபர் ஆசாத்தின் ஆட்சியை அகற்றும் நோக்கில் தாக்குதலில் ஈடுபட்டு வரும் புரட்சிப்படைக்கு ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் நேற்று தெற்கு சிரியாவின் டாரா மாகாணத்தில் உள்ள அல்-சனமெயின் மற்றும் காபாகெப் ஆகிய நகரங்களில் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.

வீடுகள் மீது வெடிகுண்டுகளை வீசியது. புரட்சிப்படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் 6 குழந்தைகள், 7 பெண்கள், 16 புரட்சிப் படை வீரர்கள் மற்றும் 16 அடையாளம் தெரியாத நபர்கள், 12 ராணுவ வீரர்கள் இறந்ததாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். கடந்த இரு தினங்களுக்கு முன், ராணுவத்தில் உள்ள சுமார் 12 வீரர்கள், புரட்சிப்படையில் சேர்ந்ததையடுத்து இந்த தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments