இந்தப் படத்தில் உள்ள பெரியவரின் பெயர்... மா சான்ஸியோ. சீனாவைச் சேர்ந்த 62 வயதாகும் இந்த முதியவர், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு Blood poisoning எனப்படும் மோசமான நோய் (Septicemia) உண்டு. இதன் காரணமாக இரண்டு கால்களையும் அடுத்தடுத்து இழந்துவிட்டவர். இந்நிலையிலும்கூட கடந்த 10 ஆண்டுகளாக ஆட்கள் நடமாட்டமே இல்லாத மலைப்பகுதியைத் தேர்ந்தெடுத்து, சுமார் 3,000 மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.
ரத்த காயம் எதுவும் ஏற்பட்டால், அந்த பாகத்தையே வெட்டியெடுத்துவிட வேண்டும் எனும் மோசமான உடல் நிலையில் இருக்கும் இவர், மரக்கன்று நடும் பணியின்போது தவறிவிழுந்து வலது கை சுண்டு விரலில் அடிபட்டு, அதுவும் வெட்டியெடுக்கப்பட்டு விட்டது. அதற்கு பிறகும்கூட, 'இதுதான் ஆத்ம திருப்தியான பணி. இதை எல்லோரும் செய்யுங்கள்' என்றபடியே மரக்கன்று நடும் வேலையைத் தொடர்கிறார்.
இவன்தான் மனிதன்!
1 comment
உண்மையில் இவர் தான் மனிதன் ... வியக்க வைக்கும் செயல் இது !
Post a Comment