Latest News

June 22, 2012

கூட்டணி மாற்றம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை! கலைஞர் பேட்டி!
by admin - 0



திமுக தலைவர் கலைஞர் தலைமையில் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் இன்று (22.06.2012) சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடி முக்கிய ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்து ஜூலை 4ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கலைஞர் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.


கேள்வி: மத்தியில் பல்வேறு அரசியல் சூழ்நிலை நடந்துகொண்டிருக்கிற இந்த நேரத்தில் தேசிய அரசியலில் ஒரு பெரிய கூட்டணி மாற்றம் வருமா?


பதில்: வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.


கேள்வி: சிறை நிரப்பும் போராட்டத்தில் நீங்கள் கலந்துகொள்வீர்களா?


பதில்: சொன்னால் கலந்து கொள்கிறேன்.


கேள்வி: திமுகவில் அனுபவம் வாய்ந்த திறமையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். காலியாகப்போற நிதித்துறையை கேட்டுப் பெறுவீர்களா? அல்லது முக்கிய துறையை கேட்டுப்பெறுவீர்களா?


பதில்: காலியாகப்போகிற நிதியை யாராவது கேட்பார்களா?


இவ்வாறு பதில் அளித்தார்.

« PREV
NEXT »

No comments