Latest News

May 04, 2012

முல்லைத்தீவு காட்டில் மரம் வெட்டியவர்கள் கைது
by admin - 0

முல்லைத்தீவு, வல்லிபுரம் காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரம் வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் முல்லைத்தீவு பொலிஸார் நடாத்திய சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் காட்டுப் பகுதியில் வெட்டி எடுத்துச் செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த நான்கு மற்றும் ஏழு அடி உயரமான மரக்குற்றிகள் ஒரு தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த மரங்களின் தற்போதைய பெறுமதி இரண்டு லட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

« PREV
NEXT »

No comments