Latest News

May 26, 2012

தேன் எடுக்கசென்றவர் யானை தாக்கி பலி
by admin - 0

மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் வசிக்கும்
குடும்பஸ்தர் ஒருவர்
யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர்
பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை முதலியார்
கமம் எனும் கிராமத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின்
தந்தையான சங்கரப்பிள்ளை வரதராஜா (வயது-45)
என்பவர் கடந்த 22 ஆம் திகதி காலை தேன்
சேகரிப்பதற்காக கல்லானி பாம் எனும் காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார்.
ஆனால் இவர் அன்றைய தினம் மாலை வீடு திரும்பாத
நிலையில் இவரின் உறவினர்கள் மறு நாள் காலை 23
ஆம் திகதி குறித்தபகுதி காவல்துறையினரின்
உதவியுன் குறித்த குடும்பஸ்தர் உடலமாக
மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து குறித்த உடலம் மன்னார்
பொது வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டது.மன்னார் மாவட்ட நீதவான்
ஏ.யூட்சன்
நேற்று சடலத்தை சடலப்பரிசோதனைக்கு உற்படுத்துமாறு உத்தரவிட்டார்.
இறந்தவரின் உடலில் பல இடங்களில் யானை தாக்கியதினால் ஏற்பட்ட காயங்கள் உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments