Latest News

March 01, 2012

சென்னை M.K.B. நகரைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் மர்ம நபர்களால் கடத்தல் சென்னை அதிர்ச்சியில்
by admin - 0

சென்னை M.K.B. நகரைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, யுவராஜ் என்னும் பத்தாம் வகுப்பு மாணவன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு இன்று வரை வீடு திரும்பவில்லை. இதனிடையே, சிறுவனின் தந்தை கிருஷ்ணனிடம் தொலைபேசியில் பேசிய மர்ம நபர்கள், சிறுவனை தாங்கள் கடத்தி வைத்திருப்பதாகவும் ஒரு கோடி ரூபாய் தந்தால் விடுவிப்பதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, படிப்பதற்கு பயந்து மாணவன் நாடகமாடுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
« PREV
NEXT »

No comments