Latest News

February 27, 2012

டெங்கு நோயின் தாக்கம் அதிகம்; சுகாதார அமைச்சு
by admin - 0


நாடளாவிய ரீதியில் இவ்வாண்டு ஜனவரியில் மட்டும் டெங்கின் தாக்கத்தினால் 27 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் 6138 டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 50 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
நாட்டு மக்கள் அனைவரும் தமது பிரதேசங்களில் உள்ள நுளம்பு பரவுவதற்குரிய இடங்களை உடனடியாக துப்புரவு செய்யுமாறும் வேண்டப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல காய்ச்சல் ஏற்பட்டு தொடர்ந்தும் மூன்று நாட்களுக்கு மேல் இருக்குமானால் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது
« PREV
NEXT »

No comments