Latest News

February 29, 2012

பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை - விரைவில் சட்டம்
by admin - 0


நாட்டில் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதித்து சட்டமூலம் ஒன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த சட்ட மூலம், சட்டமூல திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த சட்ட மூலம் திணைக்களத்திற்கு வருடாந்தம் அனுப்பி வைக்கப்படுகின்ற போதும் தமிழ் மொழிப் பெயர்ப்பில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் காலதாமதமாவதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
« PREV
NEXT »

No comments