Latest News

February 29, 2012

மிகுதிப் பணத்தை வழங்கத் தவறும் பஸ் நடத்துநர் இடைநிறுத்தப்படுவர்;கெமுனு விஜேரட்ன
by admin - 0

னியார் பஸ்களில் பயணிகளுக்கு மிகுதிப் பணத்தை வழங்கத் தவறும் நடத்துநர்களை இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்.

அதற்கமைய, மிகுதிப் பணத்தை வழங்கத் தவறும் நடத்துநர்களை இரண்டு தினங்கள் பணியிலிருந்து இடை நிறுத்தத் தீர்மானித்துள்ளதாக அச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையுயர்வு காரணமாக அண்மையில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையிலும் அதிக கட்டணம் அறவிடுதல் மற்றும் மிகுதிப் பணத்தை வழங்காமல் விடுதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுவருவது குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments