Latest News

January 29, 2012

பாம்பின் தலையை பிடித்து கடித்த ஒரு வயது குழந்தை
by admin - 0

இளம்கன்று பயம் அறியாது என்று கூறுவார்கள்.
அதாவது எதிர்விளைவு பற்றி அறியாமல்
நடந்து கொள்பவர்களை இவ்வாறு குறிப்பிடுவார்கள்.
அது போலவே பாம்பை பிடித்து ஒரு வயது குழந்தை கடித்த
சம்பவம் இஸ்ரேலின் வடக்கே ஜெருசிலேம்
அருகே அரேபியர்கள் அதிகம் வசிக்கும் நகரில் நடந்தது. மேலும் அந்த குழந்தையின் பெயர் இமாத் அலீயன்.
பிறந்து 13 மாதங்களே ஆன இந்த குழந்தைக்கு 6
சிறிய பற்கள் இருக்கின்றன. இந்த குழந்தையும்,
தாயும் வீட்டில் இருந்தபோது ஒரு பாம்பு புகுந்தது. குழந்தையில் அருகில்
சென்று அது சுருண்டு கிடந்தது. பொதுவாக
குழந்தைகள் தங்களின் கையில் பட்ட
பொருட்களை எடுத்து வாயில்
வைத்து கடித்து விடும். அதுபோலவே இந்த
குழந்தையும் எதிர்பாராதவிதமாக கையில் சிக்கிய பாம்பை பிடித்து அதன் தலைப்பகுதியை கடித்தது. இதைக் கண்ட இக்குழந்தையில் அருகில் இருந்த தாய்
இதை பார்த்து பதறிப்போய் அலறினார். இந்த
அபயக்குரலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர்
ஓடி வந்து சுமார் 1 அடி நீளமுள்ள
பாம்பை குழந்தையின் பிடியில் இருந்து எடுத்தனர்.
அதன் பின்னரே குழந்தை அலறி அழுதது.
« PREV
NEXT »

No comments