இது குறித்த விவசாய துறை அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சின் செயலாளர் சுனில் எஸ்.சிறிசேன தெரிவித்தார்.
கடன் அடிப்படையில் விவசாயிகளுக்கு பிளாஸ்டிக் கூடைகளை பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை விஸ்தரித்தல் தொடர்பாக பேச்சுவார்த்தையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அடுத்த மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் பிளாஸ்டிக் கூடைகளை உபயோகிப்பது கட்டயமாக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னர் நிவாரணம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுனில் எஸ்.சிறிசேன தெரிவித்தார்.
அத்துடன், பிளாஸ்டிக் கூடைகளைப் பயன்படுத்த தற்போது தமது வர்த்தகர்கள் படிப்படியாக பழக்கப்பட்டு வருவதாக மெனிங் சந்தை பொது சேவை சங்க செயலாளர் காமினி ஹந்துன்கே தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment