Latest News

December 27, 2011

வயோதிப பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை
by admin - 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடிப் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை வயோதிபப் பெண்னொருவர் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி -01 ஜச் சேர்ந்த வெள்ளக்குட்டி வெள்ளையம்மா (வயது-65) என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மரணமான பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments