Latest News

December 23, 2011

இரட்டை தலையுடன் பிறந்த அதிசய குழந்தை
by admin - 0

பிரேசில் நாட்டு பெண்ணுக்கு இரட்டை தலை உள்ள ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
பிரேசில் நாட்டின் வடகிழக்கு பாரா மாநிலத்தைச் சேர்ந்தவர் மரியா டி நாசரே(25). கர்ப்பமாக இருந்த மரியா இங்குள்ள அனாஜஸ் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு மரியாவுக்கு பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் குழந்தைக்கு இரண்டு மூளைகள், இரண்டு முதுகெலும்பும், ஆனால் இதயம், நுரையீரல், கல்லீரல், இடுப்பெலும்பு ஆகியவை வழக்கமாக இருப்பது போல ஒன்று மட்டும் இருப்பது கண்டறியப்பட்டது. பிரசவ காலம் நெருங்கியதும் மரியாவுக்கு வைத்தியர்கள் அவசர அறுவை சிகிச்சை செய்து இரட்டை தலை உள்ள ஆண் குழந்தையை வெளியே எடுத்தனர். நல்ல ஆரோக்கியத்துடன் குழந்தை இருப்பதாகவும், அதன் நிறை 4 கிலோ இருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இக்குழந்தைக்கு எமனோயில் யேசு என்று பெயரிடப்பட்டிருக்கிறது. பிரேசில் நாட்டில் இரட்டை தலையுடன் கூடிய குழந்தை பிறப்பது இது இரண்டாவது சம்பவம். ஏற்கனவே, பரைபா மாகாணத்தில் சுலே பெரைரா என்ற பெண்ணுக்கு இரண்டு தலை கொண்ட குழந்தை பிறந்து, பின்பு சில மணி நேரங்களில் உயிர் பிரிந்தது என்று கூறப்படுகிறது.
« PREV
NEXT »

No comments