Latest News

November 30, 2011

கொலைவெறி பாடலை கேட்டு புல்லரித்துப் போன அமிதாப்!
by admin - 0

தனுஷ் எழுதி, பாடிய கொலைவெறி பாடலைக் கேட்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் புல்லரித்துப் போனாராம். இதுபற்றி அவர் தனது பிளாக் பக்கத்தில், ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி.. ஆஹா, என்ன ஒரு பாடல். உதடுகளை விட்டு நீங்க மறுக்கும் பாடல். மனதை அப்படியே மாற்றிப் போடுகிறது. அருமையான அனுபவம். பாடலைக் கேட்கும்போதே உதடுகளில் புன்னகை வந்து உட்கார்ந்து விடுகிறது, கூடவே சிரிப்பும் வருகிறது. முகத்தில் பலவித ரசங்கள் மாறி மாறி நடனமிடுகின்றன, என்று எழுதியிருக்கிறார்.

யூடியூபில் இப்போது இந்தப் பாடல்தான் சக்கை போடு போடுகிறது. காட்டுத் தீ போல இது பரவியுள்ளது. இளம் நடிகர் படையின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் தனுஷ், மிக இனிமையாக இந்தப் பாடலை எழுதியுள்ளார். யாரைப் பார்த்தாலும் இப்போது இந்தப் பாடலைத்தான் கேட்கிறார்கள் என்றும் உணர்ச்சிவசப்பட்டுள்ளார் அமிதாப்.
<a href="http://www.bux2get.com/aft/0e36db18/c4062c69.html" target="_top"><img src="http://banners.bigextracash.com/banner_1_300x250.jpg" border="0" alt="Get cash from your website. Sign up as affiliate." title="Get cash from your website. Sign up as affiliate." width="300" height="250" /></a>
« PREV
NEXT »

No comments