ஒக்ரோபர் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள யாழ்.பல் கலைக்கழகப் பொதுபட்ட மளிப்பு விழாவில் நான்கு பேருக்கு கௌரவ கலாநிதிப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
யாழ். பல்கலைக்கழக மூத வையின் சிபார்சின் பேரில் யாழ். பல்கலைக்கழக பேரவை குறித்த நால்வருக்கு கௌரவ கலாநிதிப் பட்டங்களை வழங்க அங்கீகாரம் வழங்கியுள்ளது.இந்தப் பட்டமளிப்பு விழாவில் வாழ்நாள் பேராசிரியர் திருமதி ஆர்.மகேஸ்வரன், வாழ்நாள் பேராசிரியர் எஸ்.கே.சிற்றம் பலம், வைத்திய கலாநிதி எஸ். ஆனந்தராஜா, ஆறு திரு முருகன் ஆகிய நால்வருக்குமே கௌரவ கலாநிதிப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
யாழ். பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் மகத்தானசேவை ஆற்றியமைக்காக வாழ்நாள் பேராசிரியர் திருமதி ஆர். மகேஸ்வரனுக்கு விஞ்ஞான கலாநிதி பட்டம் வழங்கப்படுகிறது.யாழ். பல்கலைக்கழகத்தில் நீண்ட காலம் ஆற்றிய மகத்தான சேவையைக் கௌரவித்து வாழ்நாள் பேராசிரியர் எஸ்.கே. சிற்றம்பலத்துக்கு இலக்கிய கலாநிதிப் பட்டம் வழங்கப் படுகிறது.
யாழ். போதனா வைத்திய சாலையில் யுத்த சூழ்நிலையில் இடர்பாடுகளுக்கு மத்தியில் சிறந்த மருத்துவ சேவை வழங்கியமைக்காக வைத்திய கலாநிதி எஸ். ஆனந்தராஜாவுக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்படுகிறது. சமூக சமயப் பணிகளில் ஈடுபட்டு வரும் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகனுக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்படுகிறது.
No comments
Post a Comment