Latest News

September 02, 2011

வன்னியில் கடும் வரட்சி; குடிநீருக்கு தட்டுப்பாடு
by admin - 0

வன்னியின் பல பகுதிகளிலும் கடும் வரட்சி நிலவி வருவதால் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் அங்குள்ள மக்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.கோடைக்கால வரட்சியின் காரணமாக கிணறுகளில் நீர் வற்றியுள்ளது. இதனால் நீருள்ள ஆழமான கிணறுகளை நோக்கி மக்கள் தொலைதூரம் செல்ல வேண்டியுள்ளது. அத்துடன் பெளசர் மூலமான குடிநீர் விநியோகத்திலும் குறைபாடுகள் நிலவுகின்றன.

தட்டுவன்கொட்டி, தருமபுரம், பூநகரி, வெள்ளாங்குளம், வலைப்பாடு, முழங்காவில், முட்கொம்பன், அக்கராயன், ஆனை விழுந்தான் ஆகிய பகுதிகளிலுள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். சில பகுதிகளில் மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை பிரதேச செயலகங்களும் படையினரும் மேற்கொண்டு வருகின்றனர். எனினும் மக்களுக்கான குடிநீர்ப் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments