குரொய்டன் பகுதியில் தமிழ் கடைகள் நிறைந்த இடமும் இந்தக் கலவரங்களில் தப்பவில்லை. அங்கும் கட்டிடங்கள் தீக்கிரையாகின.
கடைகளை உடைத்து உள்ளிருக்கும் பொருட்களை சூறையாடுவதில் இளைஞர் கும்பல்கள் ஈடுபட்டுள்ளனர்.
அடையாளம் தெரியாதபடி முகத்தை மூடியபடி இளைஞர் கும்பல்கள் அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொருட்சேதம் என்பதைத் தாண்டி நிறையபேரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கான ஆடைகள் விற்கும் கடைகள் சூறையாடல்களின் பெரிய இலக்காக அமைந்துள்ளன.
No comments
Post a Comment