Latest News

July 30, 2011

ஏழு தலைப் பாம்பை பிரசவித்த அதிசய பெண்!
by admin - 0


ஏழு தலை பாம்பை பிரசவித்து உள்ளார் என்று பரபரப்புத் தகவலை தெரிவித்து உள்ளார் சுவாசிலாந்து நாட்டு யுவதி ஒருவர். இவரின் பெயர் Patience Tsabedze. வயது 27. பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி. தீய சக்திகளை முன்பு வழிபட்டு வந்தவர். கடும் வயிற்றுக் குத்து திடீரென்று ஏற்பட்டது என்றும் தொடர்ந்து ஏழு தலை பாம்பை பிரசவித்தார் என்றும் கூறுகின்றார்.




பாம்பை கடந்த 07 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை பிரசவித்தார் என்கின்றார். ஆனால் கர்ப்பம் தரித்து இருக்கவில்லை என்றும் கூறுகின்றார்.

மலசலகூடத்துக்குள் பாம்பு நுழைந்தது என்றும் அலுவலகத்தில் இருந்த கணவன் தகவல் அறிந்து வந்து பார்த்தபோது மலசலகூடத்தில் பாம்பை கண்டுகொண்டார் என்றும் குறிப்பிடுகின்றார் யுவதி. பாம்பை கொல்ல கணவன் முயன்றபோது தண்ணீருக்குள் மறைந்து விட்டது என்கின்றார்.

வாழ்க்கையில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் தீய சக்திகளை வழிபடுகின்றமையை கை விட்டு விட்டார் என்றும் அதற்குப் பின்னர் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான சம்பவங்கள் நேர்கின்றன என்றும் யுவதி ஊடகங்களுக்கு விளக்கம் கொடுத்து இருக்கின்றார்.

லீற்றர் கணக்கில் இரத்த வாந்தி எடுக்கின்றார் என்றும் வாந்தியுடன் சேர்த்து புழுக்கள், மீன்கள், சிலந்திகள் போன்றன வயிற்றுக்குள் இருந்து வெளியில் வருகின்றன என்றும் சொல்லுகின்றார்.

தீய சக்திகள் கோபம் அடைந்து விட்டன என்றும் ஒவ்வொரு இரவும் ஏதோ ஒரு வகையில் பெரும்பாலும் துன்புறுத்துகின்றன என்றும் சொல்லி கவலைப்படுகின்றார் யுவதி.

ஏழு தலை பாம்பை வாழ்க்கையில் முதல் தடவையாக பார்த்தார் என்று உடல் புல்லரிக்கக் கூறுகின்றார் கணவன்.


இதுதொடர்பான செய்தி
« PREV
NEXT »

No comments