Latest News

July 29, 2011

விண்வெளியை அடைந்தது சீனாவின் புதிய செயற்கைக்கோள்
by admin - 0

 ஜூலை 27: சீனா புதன்கிழமை புதிய செயற்கைக்கோளை செலுத்தியது. இது விண்வெளியை வெற்றிகரமாகச் சென்றடைந்தது.

பூமியில் உள்ள பொருள்கள் மற்றும் வாகனங்கள் இருக்கும் இடத்தை அறியும் ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியை இப்போது அமெரிக்காவிடமிருந்து சீனா பெற்று வருகிறது. இந்நிலையில் தமக்கென சொந்தமாக ஜிபிஎஸ் தொழில்நுட்ப முறையை உருவாக்க அந்நாடு முயற்சித்து வருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு 2000-ம் ஆண்டில் இருந்து பல செயற்கைக்கோளை சீனா விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இதன் ஒருபகுதியாகவே இப்போது புதிய செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது.
சீனாவின் தென்மேற்கு பகுதியின் சிஜுவான் மாகாணத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. மார்ச்- 3ஏ என்ற ராக்கெட், செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணை நோக்கி பாய்ந்ததும் அந்நாட்டு விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.






« PREV
NEXT »

No comments