92 வயது மூதாட்டி ஒருவர் 60 வயதுக் குழந்தை ஒன்றை சீனாவில் சில நாட்களுக்கு முன் பிரசவித்து உள்ளார். என்ன அதிசயமாக இருக்கின்றதா? மூதாட்டியின் பெயர் Huang Yijun. சீனாவின் தென்பகுதியைச் சேர்ந்தவர்.
குழந்தை இறந்துதான் பிறந்து இருக்கின்றது. இவர் உண்மையில் ஒரு கல் குழந்தையைத்தான் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக சுமந்து வந்திருக்கின்றார்.
வயிற்றில் உருவான சிசு 1947 ஆம் ஆண்டு இறந்து இருக்கின்றது. இறந்த சிசுவை வெளியில் எடுக்க வெண்டும் என்று வைத்தியர்கள் அந்நாட்களில் சொல்லி இருக்கின்றனர்.
ஆனால் வறுமை காரணமாக இவர் பேசாமல் இருந்து விட்டார். இறந்த சிசு வயிற்றுக்குள் கல்லைப் போல் ஆகி விட்டது.
www.vivasaayi.com |
இது மிகவும் அரிதாக ஏற்படக் கூடிய நோய். முட்டை கருப்பைக்குள் வெளியில் தங்கி விடுகின்ற அதே சமயம் மகப் பேறு தோல்வி அடைகின்றபோது இந்நோய் ஏற்பட்டு விடுகின்றது.
No comments
Post a Comment