திருப்பூரில் சிக்கன்னா அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இக் கல்லுரிக்கு, பிரபு (55) என்ற பேராசிரியர், புதிய முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு அக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஏற்பட்ட நோயினால் தான் பிரபுவுக்கு கண் பார்வை பறிபோனதாம்.
ஆனாலும், இவர் சென்னை கிறித்துவக் கல்லுரியில் ஆங்கிலம் பயின்றார். பி.எச்.டியில் தங்கப் பதக்கம் வென்றார். மேலும், முனைவர் பட்டமும் வாங்கியுள்ளார்.
கடந்த, முப்பது ஆண்டுகளாக ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வரும் இவர், ஹரியான பி.பி.எஸ் பெண்கள் கல்லூரி, சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லுரி போன்ற கல்லூரிகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
திருப்பூர் சிக்கன்னா கலைக் கல்லுரிக்கு முதல்வராக செல்லும் முன்பாக சென்னை பிரசிடென்சி கல்லூரியின் ஆங்கிலத்துறை தலைவராக பிரபு பணியாற்றியுள்ளார்.
தமிழகத்தில் கண்பார்வை இல்லாத ஒருவர் முதல்வராக பொறுப்புக்கு வந்துள்ளது இது தான் முதல் முறை என்று கூறப்படுகின்றது.
No comments
Post a Comment