Latest News

May 08, 2011

தாய்மை
by admin - 0


எந்த உறவுக்குமில்லாத
மதிப்பை அன்னைக்கு அளித்து
அதன் பெருமைகள் முடிவில்லா 
பட்டியலாக நீண்டு கொண்டே போய்
மனதில் அசைக்க முடியாத இடத்தைப் 
பெற்றிருக்கிறது இந்த தாய்மை 

பெண் முழுமையடைவது
தாயாகும்போது தான் என்பார்கள்
இயற்கையின் இயல்பான
நிகழ்வான தாய்மையடைவதே
பெருமை என்ற போது 
தாய்மை முழுமையடைவது எப்போது?????


நான் பெற்றவள் என்ற
உரிமை நிலைநாட்டலாய் இல்லாமல்
சுயநலக் கலப்பின்றி 
கருத்து பரிமாறும் சகோதரியாக 
கைகோர்க்கும் போது....

என் அடையாளம் நீ என்ற
அலட்டல் இல்லாமல்
வாழ்வியல் நெறிகளை
வலிக்காமல் திணிக்கத்
தெரிந்த குருவாக 
வழிநடத்தும் போது....

அன்பென்ற பெயரில் நிகழும்
ஆக்கிரமிப்பாக இல்லாமல்
ஆத்மார்த்தமான நட்பாக பிள்ளைகள் மனதில்
அன்னையின் பிம்பம் மலரும்போது மட்டுமே 
முழுமையடைகிறது தாய்மை !!!



------நன்றி சிங்கப்பூர் தமிழ்முரசு !!


                        அன்னையர் தின வாழ்த்துக்கள்  !!!
                     

« PREV
NEXT »

No comments