ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலையினால் ஏறத்தாழ 10000 பேரை துறைமுக நகரமான மினாமிசான்ரிகுவில் காணவில்லை என்று ஜப்பான் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இது இந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாகும்.
டோக்கியோவின் மின் உற்பத்தி நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிச் சத்தத்தினாலும் மக்கள் பீதியடைந்து உள்ளனர். அணு மின் உற்பத்தி நிலையத்தை சுற்றியுள்ள மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானுக்கு 50க்கும் மேற்பட்ட நாடுகள் உதவ முன்வந்திருக்கின்றன. இந்த துயர நிகழ்ச்சியில் இதுவரை ஏறத்தாழ 1300 வரை மரணமடைந்துள்ளனர்.
No comments
Post a Comment