Latest News

December 26, 2010

இந்த நரசிம்மருக்கு புலிமுகம்
by admin - 0


நரசிம்மர் என்றால் சிங்கமுகத்துடன் தானே இருப் பார்! நர (மனித) உடம்பும், சிம்ம (சிங்க) முகமும் கொண்டவர் என்பதால் தான் அவருக்கு "நரசிம்மர்' என்றே பெயர் வந்தது. ஆனால், நரசிம்மருக்கு 32 வகையான முகங்கள் இருப்பதாக ஆகம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் வியாக்ர (புலி) முகம். விஜயவாடாவில் இருந்து 32 கி.மீ., தூரத்தில் சோபனாத்ரி என்ற ஊர் இருக்கிறது. இந்த ஊரிலுள்ள மலையில் நரசிம்மர் புலி முகத்துடன் இருக்கிறார். இதே ஊரில் சிவன் கோயில் ஒன்றும் உள்ளது. இந்த இறைவனை 'வியாக்ரபுரீஸ்வரர்' என்கின்றனர். புலிமுகத்துடன் கூடிய நரசிம்மரையும், புலியின் பெயரைக் கொண்ட சிவனையும் ஒரு சேர வணங்கினால் மன தைரியம் அதிகரிக்கும்.
« PREV
NEXT »

No comments