பெற்றோலில் இயங்கும் வாகனங்களில் எவ்வித தொழில்நுட்ப மாற்றமும் இன்றி இந்தப் புதிய எரிபொருளை நிரப்பி அவற்றை இயங்க வைக்க முடியும் என இக்குழு தெரிவித்துள்ளது.
இரண்டு கிலோ வைக்கோலில் இருந்து ஒரு லீற்றர் பியூட்ட போலைத் தயாரிக்க முடியும் என்றும், அதற்கான உற்பத்திச் செலவு 28 ரூபா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய உயிரியல் விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் சரத் பண்டார, கலாநிதி சாலிய சில்வா, ஆராய்ச்சியாளர் பிரியந்த விஜேரத்ன ஆகியோர் அடங்கிய குழுவே இச்சாதனையைப் புரிந்துள்ளது.
இது தொடர்பில் பிரியந்த விஜேரத்ன தெரிவித்தவை வருமாறு:
இலங்கையில் வருடாந்தம் பல்லாயிரம் தொன் வைக்கோல் மிஞ்சுகின் றது. எனவே, உள்நாட்டில் பியூட்டபோலை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள் தாராளமாக இருக்கிறது.
இதற்கென விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ வைக்கோலை பத்து ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ளும் திட்டமும் உள்ளது இவ்வாறு பிரியந்த தெரிவித்தார்.
No comments
Post a Comment