Latest News

July 01, 2020

சுமந்திரனின் அரசியல் ஊடுருவல் தொடர்பானது...
by Editor - 0

சுமந்திரனின் அரசியல் ஊடுருவல் தொடர்பானது...

எமது அன்பார்ந்த தமிழீழ மக்களே! எமது தாயக விடுதலைப்போரட்ட வரலாற்றில் அரசியல்ரீதியாக மேற்கொள்ளப்பட்டுவந்த தமிழர்களுக்கான இராஜதந்திர நடவடிக்கைகள் பலம்பொருந்திய நிலையிலும், தமிழர்களுக்கானதீர்வு முன்வைக்கப்படும் நிலையிலேதான் இரட்டைமுகவர் மூலமான ஊடுருவல் செயல்பாடுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. அந்தவகையிலேதான் சுமந்திரன் என்பவருடைய அரசியல் உட்பிரவேசம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் இராஜதந்திரரீதியாக ஊடுருவி அவரால் மேற்கொள்ளப்பட்டுவருகிற தமிழர்களின் ஒற்றுமையைச்சிதைத்து பிரித்தாலும் தந்திரமுறைமையும் இன்று வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பேரன்புமிக்க எம்தேசத்து உறவுகளே! ஓர்வரலாற்று உண்மையை எம்மக்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம். சிங்கள அரசுக்கெதிராக தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் போராட்டங்கள்யாவும் அதேதமிழர்களைவைத்து அப்போராட்டங்களை அழித்தொழித்தமையானது சிங்கள அரசு மேற்கொண்ட ஊடுருவல்வெற்றியாகும். அந்தவகையிலேதான் சிங்களதேசத்து தமிழ்பேசும் சுமந்திரனை சிங்கள அரசு தமிழர்களுக்கெதிராக தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் ஊடுருவலாளராக உட்புகுத்தி தமிழ்தேசியகூட்டமைப்பை உடைத்து, பிளவுபடுத்தவேண்டுமென்ற நீண்டதிட்டமிடலுடன் களமிறக்கப்பட்டாரென்பது குற்றவியல் நடைமுறைச்சட்டத்துக்கமைய நியாயமான சந்தேகத்திற்க்கப்பால் நிருபிக்க முடிகிறது. இவ்விடயம் இவ்வாறிருக்க தமிழர்களின் அரசியல்வரலாற்றில் புதியதிருப்பம் தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. அதாவது தமிழர்களின் உரிமைக்காக அரசியல்ரீதியாக குரல்கொடுக்கும் அனைத்துத்தரப்பினரையும் ஒருங்கிணைத்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாக்கி அனைவரும் ஒரேதளத்தில் பயணிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. அதன்பயனாக இலங்கைப்பாராளுமன்ற வரலாற்றில் 22 ஆசனங்களைப்பெற்று தமிழர்தரப்பு மிகப்பலம்பொருந்தியகட்சியாக மாற்றம்பெற்றது. இவ்விடயம் சிங்களபௌத்த இனவாத அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் அச்சத்தை ஏற்படுத்திய அதேநேரம் இவ்வொற்றுமைக்கெதிரான மாற்றத்தை ஏற்படுத்தவேண்டியதேவை சிங்கள அரசுக்கு ஏற்பட்டது. இந்நிலையில்தான் சம்மந்தன் அவர்களின் முதுட்சிநிலையும் அவரின் ஆசீர்வாதத்தோடும் தமிழ்பேசும் சிங்களவவொருவரை தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் உட்புகுத்தவேண்டியதேவை ஏற்பட்டிருந்தது. அந்தவகையிலேதான் சிங்கள அரசாங்கத்திற்கு உளவாளியாக இருந்த சுமந்திரன் ஊடுருவல்உளவாளியாக மாற்றப்பட்டு சம்மந்தனுடாக தமிழ்மக்களுக்கெதிராக களமிறக்கப்பட்டாரென்பது இயற்கைநீதிக்கோட்பாட்டின்படி நிருபணமாகின்றது. இந்நிலையில்தான் கூட்டமைப்புக்குளிருந்துகொண்டு சுமந்திரன் நீண்டநிகழ்ச்சிநிரலை ஆரம்பிக்கத்தொடங்கினார். அதன் முதற்கட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த எவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் நுழையமுடியாதவாறு வேலிகளை பலப்படுத்தினார். அத்தோடு இளைய சமூகத்தினர் எவரும் நேரடியாக அரசியலில் உட்புகமுடியாதெனவும், அவர்கள் தொண்டர்களாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு விரும்பினால் உதவலாமெனவும் உணர்வுமிக்க தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களை முடக்கிவிட்டதன்மூலம் சுமந்திரனின் அரசியற்ச்சாணக்கியம் வெளிக்கொணரப்பட்டதென்பது மறுப்பதற்கில்லை.
மேலும் நீதிதவறாதமனிதராக எம்மக்களால் பார்க்கப்படுகின்ற முன்னாள் வடக்குமாகாண முதலமை‌ச்ச‌ரான திரு விக்னேஷ்வரன் என்பவருக்கெதிராக சுமந்திரனின் பிரித்தாளும் தந்திரமுறைமையால் கொண்டுப்வரப்பட்ட நம்பிக்கையில்லாப்பிரேரணைமூலம் மக்கள்மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியமை சிங்கள இராணுவப்புலணாய்வாளரின் ஊடுருவல்முகவரென்பதை சுமந்திரன் மக்களுக்குத்தன்னை அடையாளப்படுத்தினார். எனவே சிங்கள அரசியலில் ஞானம்பெற்றவரென்பதும் மறுப்பதற்கில்லை. அதுமட்டுமன்றி தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளைத்தோற்றிவித்து, கட்சிகளுக்கிடையிலான குரோதப்போக்குகளை வளர்த்து, பிளவுபடுத்தி கூட்டமைப்புக்குளிருந்து வெளியேற்றுவதற்கான முன்னேற்பாடுகளை கோத்தபாய அரசின் ஆலோசனைப்படி மேற்கொண்டாரென்பது வரலாற்றுத்துரோகமாகவே அமைகின்றது. அதனை உறுதிப்படுத்துமுகமாக கோத்தபாய அரசிடமிருந்து இரகசியமாகப்பெற்றுக்கொண்ட ஏழுகோடிரூபா நிதி சான்றாகவே அமைகின்றது. மேலும் சுமந்திரனின் சிபார்சுக்கமைவாக கூட்டமைப்புக்குள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட பெண்வேட்பாளரின் தேர்தல்விஞ்ஞாபனத்தில் பாலியல்ச்செயல்பாடுகள்பற்றி வெளிப்படையாக்கதைப்பது தவறில்லையென்றும் இணையத்தளங்களுடாக மதுபோதையில் உரையாற்றியமையும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினூடாக சுமந்திரனால் கொண்டுப்வரப்படும்வேட்பாளர்கள் தமிழர்களுக்குரிய உரிமைகளை பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கையும் சுமந்திரனின் அரசியல்ச்சாணக்கியம் ஊடாக வெளிப்படுத்தியிருந்தாரென்பதும் மறுப்பதற்கில்லை. அதாவது ஆரம்பகால விடுதலைப்போரட்டவரலாற்றில் சிங்களபௌத்த இனவாத அரசுடனிணைந்து தமிழீழ மக்களுக்கெதிராகச்செயல்பட்ட அல்பேட் துரையப்பா அவர்களை விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. மேதகு வே. பிரபாகரன் அவர்களே நேரடியாக மரணதண்டணைவழங்கி தேசத்துரோகி என்பதை மக்களுக்கு அடையாளப்படுத்தியிருந்தாரென்பதையும் சுமந்திரனுக்கு ஞாபகப்படுத்தவிரும்புகிறோம். மேலும் யாவற்றையும் தனித்தனியே தெளிவுபடுத்தப்படவேண்டிய அவசியம் அரசியல்ச்சாணக்கியம்பெற்ற சுமந்திரனுக்கு தேவையேற்படுமென நாம் எதிர்பார்க்கவில்லை. இருந்தும் நெல்லருவிகளுக்குளிருந்த அரசியல் புல்லுருவிகள்வரிசையில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், லக்ஷ்மன் கதிர்காமர் ஆகியோரின் வரலாற்றுத்துரோகங்களை வரலாறு இன்னும் மறந்துவிடவில்லையென்பதையும் சுமந்திரனுக்கு மீண்டும் ஞாபகப்படுத்தவிரும்புகிறோம். குறிப்பாக தமிழ்தெரியாத தமிழனாக இருந்து கொண்டு லக்ஷ்மன் கதிர்காமர்செய்ததை தமிழ்தெரிந்த சிங்களச்சுமந்திரன் செய்கின்ற செயற்பாடுகளை காலம்கணித்துக்கொண்டிருக்கின்றது. ஏன்னெனில் வரலாற்றுவெற்றிடம் நிரப்பப்பட வேண்டிய நிலைவருமென்பதால். ஆகவே குட்டிக்கதிர்காமர் உருவாகுவதை நாம் விரும்பவில்லை.
எனவே மேற்காட்டிய விடயங்கள் ஒருபுறமிருக்க மறுபுறத்தில் தமிழரசுக்கட்சிதொடர்பாக அடிப்படைக்கொள்கைபற்றி சுமந்திரனுக்கு ஞாபகப்படுத்தப்படவேண்டியிருக்கிறது. அதாவது தமிழரசுக்கட்சியின்தலைவரான தந்தை செல்வநாயகம் அவர்கள் சிங்கள அரசின்கொடியை தமதுகட்சி புறக்கணிப்பதாகவும், அதற்கிணையாக நந்திக்கொடியை தனதுவாகனத்தில் பறக்கவிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியமையும், மேலும் தமிழரசுக்கட்சியின் தலைவர் தந்தை செல்வநாயகம் அவர்கள் இலங்கைச்சுதந்திரதினநாளை புறம்தள்ளி இது தமிழர்களின் கறுப்பு நாளென்பதை பிரகடனப்படுத்தியமை வரலாற்றில் தந்தை செல்வாவை தமிழர்வரலாறு சுமந்துநிற்கும் அதேநேரம் இலங்கைச்சுதந்திரதினவிழாவில் கலந்துகொண்டு வீரவசனம்பேசும் சம்மந்தனும், சுமந்திரனும் லக்ஷ்மன் கதிர்காமருக்கு அடுத்தவரிசையில் வரலாறு இடமளித்திருக்கின்றதென்பதை உணர்ந்துகொள்ளவார்களென நம்புகின்றோம். மேலும் தந்தை செல்வநாயகம் அவர்கள் இறுதியாக இலங்கைச்சட்டக்கல்லூரியில் உரையாற்றும்போது ஒடுக்குமுறைக்குளிருந்துகொண்டு தமிழர்களின் இனவிடுதலைக்காக நாம் அரசியல்ரீதியில் போராடுகிறோம், ஆனால் எந்தஉரிமையும் சிங்கள அரசு எமக்குவழங்கவில்லை. இந்நிலையில் விரும்பியோ, விரும்பாமலோ தமிழ் இளைஞர்கள் என்றோ ஒருநாள் துப்பாக்கிமுனையில் சந்திப்பார்கள் அப்போதாவது சிங்கள அரசு பதில்சொல்லவேண்டிய நிலை உருவாகுமென்பதை தெளிவுபடுத்தியிருந்தார். இதற்குமாறாக சுமந்திரன் தமிழீழ தேசிய தலைவர் திரு மேதகு வே. பிரபாகரன் அவர்களின்பெயரை உச்சரித்தமைக்கே முதலில் நாம் எச்சரிக்கை செய்யும் அதேநேரம் பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை நான் விரும்பவில்லையென்று கூறியதானது தமிழ்மக்களின் ஆயுதப்போராட்டத்தை மாசுபடுத்தியதாகவே அமைகின்றது. ஆகவே ஒட்டுமொத்தத்தில் சுமந்திரன் தமிழரசுக்கட்சிக்கெதிராக செயற்பட்டாரென்பதும், அதேநேரம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை திட்டமிட்ட முறையில் உடைத்தெறிந்தாரென்பதுடன், தமிழீழத் தேசியத்தலைவருக்கும், தமிழீழமக்களின் இனவிடுதலைப்போராட்ட கொள்கைக்குமாறாக கருத்துக்களை முன்வைத்ததுமட்டுமன்றி எமது இனவிடுதலைக்கெதிராக செயற்பட்டுவருகிறார் என்பது வரலாற்றுத்துரோகமாகவே அமைகின்றது. எனவே சுமந்திரன் உடனடியாக இலங்கை அரசியல் வரலாற்றிலிருந்து பதவிவிலகி தமிழீழ மக்கள் மத்தியில் தோன்றி பொதுமன்னிப்பு கேட்கவேண்டும் தவறின் தமிழர் வரலாற்றில் லக்ஷ்மன் கதிர்காமருக்கு அடுத்தவரலாற்றுச்சுமையை சுமந்திரன் சுமக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவாரென்பது மாற்றமுடியாத வரலாற்று நியதி.

நன்றி

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

த.கதிரவன்
இணைப்பாளர்
உலகத் தமிழ் இளையோர் ஒன்றியம்
« PREV
NEXT »

No comments