Latest News

May 27, 2017

இயற்கை அனர்த்தத்தின் எதிரொலி! இலங்கை விரைகிறது இந்தியக் கப்பல்கள்
by admin - 0

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் முப்படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், இளைஞர்கள் குழுக்களும் மீட்புப் பணியில் களமிறங்கியுள்ளனர்.

 


இதேவேளை, இந்த இயற்கையின் சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்தியக் கப்பல் ஒன்று நிவாரணப் பொருட்களுடன் கொழும்புதுறை முகத்திற்கு சென்று கொண்டிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பல் நாளை கொழும்புத் துறைமுகத்தை சென்றடையும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கபிதாத் அஷோக் ராவோ தெரிவித்துள்ளார்.

இது தவிர, மேலதிகமாக இன்னொரு நிவாரணக் கப்பலும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

« PREV
NEXT »

No comments