Latest News

March 30, 2017

படையினர் பிரச்சினையில் சிக்குவதற்கு இடமளியேன்-ஸ்ரீலங்கா ஜனாதிபதி மீண்டும் அறிவித்தார்; உலகத்தலைவர்கள் உதவத் தயாராகவிருப்பதாகவும் தெரிவிப்பு
by admin - 0

எமது படை­யி­னரை சர்­வ­தேச ரீதியில் போர்க்குற்றவிடயத்தில் பிரதிவாதியாக்குவதற்கு நான் தயா­ரில்லை. படை­யி­னரை பாது­காப்­பது அரசின் கொள்­கை­யாகும். அதேபோன்று பிரச்­சி­னையை நாங்கள் தீர்த்­துக்­கொள்­கிறோம். இதில் எவரும் தலை­யிட வேண்­டிய அவ­சி­ய­மில்லை என உல­கிற்கு சத்­த­மிட்டுக் கூறு­கின்றேன் என்று ஸ்ரீலங்கா ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

உலகின் பிர­பல்­ய­மான நாட்டுத் தலை­வர்கள் எமது நாட்டின் இறை­மையைப் பாது­காக்க அனைத்து உத­வி­க­ளையும் வழங்­கு­வ­தாக தனிப்­பட்ட ரீதியில் எனக்கு உறு­தி­ய­ளித்­துள்­ளனர் என்றும் ஸ்ரீலங்கா ஜனா­தி­பதி குறிப்பிட்டார்.

குரு­நா­கலில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரை­யாற்றுகையிலேயே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து ஸ்ரீலங்கா ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உரையாற்றுகையில்

யுத்­தத்தை வெற்­றி­கொண்ட நாடென்ற ரீதியில் படை­யி­னரை பலப்­ப­டுத்­துதல், அவர்­க­ளுக்கு சிறப்­பு­ரி­மை­களை மற்றும் உரி­மை­களை பெற்­றுக்­கொ­டுத்தல் என்பன அர­சாங்­கத்தின் கடப்­பா­டாகும்.

அத்­தோடு படை­யி­னரை பாது­காப்­பதும் அவர்­க­ளது பிள்­ளை­க­ளுக்கு வழங்­கக்­கூ­டிய சேவை­களை வழங்­கு­வதும் அரசின் கடப்­பா­டாகும்.

கடந்த இரண்டு கிழ­மை­க­ளுக்குள் நாட்டின் ஊட­கங்­களிலும் அர­சியல் துறை­யிலும் பல்­வே­று­பட்ட விமர்­ச­னங்கள் மத்­தி­யிலும் ஜெனீவா மனித உரிமை ஆணைக்­குழு தொடர்பில் அதிக கவனம் செலுத்­தப்­பட்­டது.

கடந்த வாரம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு ஆணை­யா­ளரின் புதிய பிரே­ரணை வெளி­யா­கி­யது. இது தொடர்பில் பல்­வே­று­பட்ட கோணங்­களில் அர­சுக்­கெ­தி­ரான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. இதனை ஊட­கங்­களின் மூலம் நான் பார்­வை­யிட்டேன்.

எமது கடற்­ப­டை­யி­லி­ருந்து முக்­கிய அதி­கா­ரி­யொ­ருவர் ஜெனீவா சென்றார். பிர­தி­வா­தியின் வெளிப்­பாட்டை வழங்­கு­வ­தற்­கா­கவே சென்றார். அதனை கைய­ளித்தார்.

நான் சட்­டத்­த­ர­ணி­யல்ல. பிர­தி­வா­தியின் அறிக்­கையை சமர்ப்­பிப்­ப­தற்கு ஒருவர் பிர­தி­வா­தி­யாக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அவ்­வாறு இல்­லாமல் அறிக்­கையை சமர்ப்­பிப்­பது பொருத்­த­மான விட­ய­மல்ல.

யுத்­த­கா­லத்தில் மனித உரிமை மீறல்கள் மற்றும் வேறு விட­யங்கள் தொடர்பில் எமது படை­யி­ன­ருக்கும் அர­சுக்கும் முன்­வைக்­கப்­பட்­டுள்ள பிரே­ர­ணைகள் மற்றும் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் அரசின் கொள்­கையை, எனது கொள்­கையை தெளி­வாக அறி­விக்க வேண்டும்.

அது தான் நாட்டின் எந்­த­வொரு படை­யி­ன­ரையும் குற்­ற­வா­ளி­யாக்­கு­வ­தற்கு தயா­ரில்லை. குற்­ற­வா­ளி­யாக்­கவும் மாட்டேன். நாம் இதற்கு குழப்­ப­ம­டையத் தேவை­யில்லை. இன்று எமக்கு சர்­வ­தேச நாடுகள், அமைப்­புக்கள், ஐ.நா. என பல்­வேறு தரப்­பினர் தமது ஆத­ரவை வழங்­கு­கின்­றன. இதனை எவ்­வாறு பயன்­பாட்­டுக்கு எடுத்­துக்­கொள்­கி­றீர்கள் என பலர் என்­னிடம் நட்­பு­ரீ­தி­யாக கேள்­விகள் கேட்­கின்­றனர்.

உலகின் பிர­பல்­ய­மான நாடு­களின் தலை­வர்கள் எனக்கு தனிப்­பட்ட ரீதியில் உறுதி வழங்­கி­யுள்­ளனர். எந்த ரூபத்தில் பிரச்­சி­னைகள் வந்­தாலும் நாட்டின் சுதந்­திரம், ஜன­நா­யகம் மற்றும் மக்­களின் உரி­மைகள் உட்­பட படை­யினர் தொடர்­பி­லான பிரச்­சி­னை­கள் ஒரு­போதும் தலை­தூக்க இட­ம­ளிக்க மாட்டோம் என உறு­தி­ப­டக்­கூ­றி­யுள்­ளனர்.

அனைத்து பிரச்­சி­னை­களின் போதும் இலங்கை அர­சுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக உறுதி வழங்­கி­யுள்­ளனர். சர்­வ­தேச ஆத­ர­வையும் நட்­பு­ற­வையும் எமது படை­யி­னரின் கௌர­வத்தை பாது­காப்­ப­தற்­கா­கவே பயன்­ப­டுத்­துவேன்.

யுத்தம் நடை­பெற்ற காலத்தில் விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ராகப் போரிட்ட எந்­த­வொரு படை­யி­ன­ரையும் பிரச்­சி­னையில் சிக்க இட­ம­ளிக்க மாட்டேன்.

இப் பிரச்­சி­னையை நாங்கள் தீர்த்­துக்­கொள்­கிறோம். எவரும் தலை­யிட வேண்­டிய அவ­சி­ய­மில்லை என உல­கிற்கு சத்­த­மிட்டுக் கூறு­கின்றேன்.

விடு­த­லைப்­புலி பயங்­க­ர­வா­திகள் அல்­லாத ஊட­க­வி­ய­லா­ளர்கள், விளை­யாட்டு வீரர்கள் உட்­பட பல்­வேறு தரத்தை சேர்ந்­த­வர்­களின் கொலைகள், தாக்­கு­தல்கள் போன்ற விட­யங்­க­ளுடன் தொடர்­பு­பட்ட எவ­ரையும் பாது­காக்கத் தயா­ரில்லை.

இது தொடர்­பி­லான விசா­ர­ணை­களின் போது அரச அதி­கா­ரிகள், படை­யினர், தனியார் நிறுவனத்தை சார்ந்தவர்கள், என்பது பார்க்கப்பட மாட்டாது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அவ்வாறானவர்களைப் பாதுகாக்க முடியாது.

யுத்தம் செய்த படையினரை பாதுகாப்பது எமது கடப்பாடாகும். அவர்களைப் பலப்படுத்துவது எமது கடமையாகும். இதனை நிறைவேற்றுவோம்.

படையினரின் கௌரவம் அவர்களது பெயரை பாதுகாப்பது படையினர் தொடர்பான மக்கள் ஆதரவை மேலும் மேலும் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் பலப்படுத்துவோம் என்றும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments