Latest News

February 22, 2017

இலண்டனில் எதிர்வரும் 26.02.17 ஆம் திகதி மாபெரும் அறவழிப் போராட்டத்திற்கு அழைப்பு!
by admin - 0

எமது மக்களுக்கு ஆதரவுக்கரம் கொடுப்போம் உறவுகளே..!!

லண்டன் 

போராட்டமே எமது வாழ்க்கையாகவும்
வாழ்க்கையே எமது போராட்டமாகவும் மாறிவிட்டது..
சொந்த நிலம் மீட்க வேண்டி முடிவில்லாது தொடரும் முல்லைத்தீவு கேப்பாபுலவு போராட்டம்.

எம் மக்களுக்கு எப்போது விடிவு வருமோ..?????
ஆண்டவா உனக்கு இரக்கம் இல்லையா.????
ஆயுதத்தால் அழித்தாய்,இயற்கையால் அழித்தாய்,இன்று அதிகாரத்தால் அழிக்கின்றாயே…
உறவுகளே எமது மக்களின் போராட்டத்திற்கு ஆதரவுக்கரம் கொடுங்கள்.
உலகத்தின் எல்லாப் பகுதியிலும் எமது மக்களின் போராட்டத்தை கொண்டுசெல்லுங்கள்.

இலண்டனில் எதிர்வரும் 26.02.17 ஆம் திகதி மாபெரும் அறவழிப் போராட்டத்திற்கு அழைப்பு!


தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும்
ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை மாற்றுவதற்கு அல்லது நீடிக்கப்பட்ட கால அவகாசத்திற்கு பிரித்தானிய ஆதரவு வழங்கக்கூடாது என்று இலண்டனில் மாபெரும் அறவழிப் போராட்டத்தை முன்னெடுக்க நாடு கடந்த அரசாங்கத்ததால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இலங்கை படைகளால் அபகரிக்கப்பட்ட கோப்பாபுலவு மக்களினது நிலங்கை மீள கையளிக்குமாறும் அதே போன்று வடக்கு கிழக்கு தாயகத்தில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள விடுவிக்கப்படாத காணிகளை பெற்றுத்தருமாறும் தமிழ் மக்களின் சமகால பிரச்சனைகளை முன்னிறுத்தி உண்ணாவிரத போராட்டமாக இது முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

10 Downing Street , Westminster , London SW14 2AA எனும் இடத்தில் எதிர்வரும் 26.02.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்ட்டுள்ளதாகவும் இதில் மக்கள் கலந்துகொண்டு எமது செய்தியை ஐநா சபைக்கு தெரிவிக்க முன்வருமாறும் அழைக்கப்படுகின்றனர்.

எம் இனம் ஒன்று சேரும் தருணம் தமிழீழம் மலரும்.
விரைவில் எம் நிலம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழீழ நிலமும் எமக்குக் கிடைக்கும். தமிழா எம் நிலம் எமக்குக் கிடைக்கும் வரை விடாது போர் செய்.
ஒற்றுமையே எமது பலம்.

  • சுகந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.     தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்…
« PREV
NEXT »

No comments