ஈ -பி -டி -பி ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்ட தாமோதரம்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்களின் 11 ம் ஆண்டு நினைவஞ்சலி
வடமராட்சி அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை சுந்தரலிங்கம் 19-01-2006 அன்று இரவு 8-30 மணியளவில் மடத்தடி -தம்பசிட்டி வீதியில் உள்ள மாயக்கை பிள்ளையார் ஆலயத்தின் வீதியில் வைத்து ஈ -பி டி -பி ஆயுததாரிகளினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 11ம் ஆண்டு நிறைவு பெறுகின்றது
சம்பவதினத்தனன்று தேவை நிமிர்த்தம் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டுருந்த தம்பசிட்டி மாயக்கை பிள்ளையார் ஆலயமுன் வீதியில் வைத்து வழிமறிந்த இரு ஆயுததாரிகள் சுட்டுப்படுகொலை செய்தனார் ,
எமது மண்ணில் சிறந்த சமூகசேவையாளராக விளங்கிய தாமோதரம்பிள்ளை அதிகமக்கள் செல்வாக்கு பெற்றமனிதராக விளங்கியவர் எமது கிராமத்தில் நடைபெறும் நன்மை தீமைகளில் முன்னின்று பாடுபடும் ஒரு சிறந்த மனிதர் , எமது கிராமத்தின் முன்னேற்றத்துக்காக மாலை சந்தை சிறிவரதராஜ விநாயகர் ஆலயம் அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலயம் அல்வாய் இளைஞர் சனசமூகநிலையம் அத்தாய் விநாயகர் சனமூகநிலையம் போன்றவற்றுக்காக உழைந்தவர் , அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலயத்தையும் அல்வாய் இளைஞர் சனசமூக நிலையம் அல்வாய் ஆலடி வைரவர் மாலை சந்தை சிறி வரதராஜ விநாயகர் ஆலயம் போன்றவற்றை இராணும் 8 வருடங்களாக பெரிய முகாம் அமைந்து இருந்த போது அதனை விடுவிக்க பல முயற்சிகளை மேற்கொண்டுவர்களில் முக்கிய பங்குவகிந்தவர் அமரா் தாமோதரம்பிள்ளை சுந்தரலிங்கம் அத்துடன் தனது இறுதிக்காலம் வரை குடும்பம் சமூகம் இனத்துக்காக வாழ்ந்தவர் அவரின் ஒரு புதல்வியை தாயகவிடுதலைப்போராட்டத்துக்காக கெடுத்தவர் குடும்பத்தின் பாசத்தை மறந்து இறுதிவரை தாயகவிடுதலைப்போராட்டத்துக்காக களமடியவள் தந்தையின் படுகொலை நாளின் போதும் அவள் போர்களத்தில் போராடி இனமனம் கந்தவள் , தாமோதரம்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டது அவரது குடும்பத்துக்கு மட்டும் அல்ல எமது சமூகத்துக்கு பெரும் இழப்பாகும் ,
No comments
Post a Comment