Latest News

November 22, 2016

லண்டன் ஹரோவில் ஒருவர் குத்திக் கொலை
by admin - 0

 பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் அமைந்துள்ள South Harrow பகுதியில் 18/11/2016 அன்று கத்திக்குத்துக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டனில் அமைந்துள்ள தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான South Harrow பகுதியில் கறுப்பு இனத்தைச் சேர்ந்த இளைஞனே கத்திக்குத்துக்கு இலக்கானதாகவும் பின்னர்   மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது. குறிப்பிட்ட சிலகாலமாக குறிப்பிட்ட இடத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments