Latest News

November 08, 2016

500,1000 இந்திய ரூபாய்கள் இன்றுடன் செல்லாது -மோடி அறிவிப்பால் வல்லரசாகும் இந்தியா
by admin - 0

 

டெல்லி: நவம்பர் 9 ஆம் தேதி (நாளை) மற்றும் 10ம் தேதிகளில் வங்கி ஏடிஎம்கள் செயல்படாது என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் நாட்டு மக்களுக்காக உரையாற்றிய போது பிரதமர் மோடி பேசியதாவது: ஏழை மக்களுக்காவே அர்ப்பணிக்கப்பட்டது இந்த அரசு. ஏழை மக்களின் நலனுக்காக செயல்படும். நாட்டில் உள்ள ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த அரசாங்கம் ஏழை மக்களுக்கான அரசாக செயல்படுகிறது. நாட்டில் கருப்பு பணமும் ஊழலும் தான் ஏழ்மைக்கு காரணமாக உள்ளது. ஊழலுக்காக அரசு மட்டுமின்றி நாட்டு மக்களும் பாடுபட வேண்டும். அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காகவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது. நமது அண்டை நாடுகள் இந்தியாவிற்குள் கள்ளநோட்டு புழக்கத்தை விட்டுள்ளது.

கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தால் இது தான் சரியான தருணம். மத்திய அரசின் கொள்கைகள் அனைத்தும் சமூகத்திற்கான வறுமை ஒழிப்புக்காக இந்த அரசு தொடர்ந்து போராடும்.

இன்று நள்ளிரவு 12 மணி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இதனால் நாட்டு மக்களுக்கும் ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகிறோம். மேலும் வரும் 9 மற்றும் 10 ம் தேதி ஆகிய இரு நாட்களும் வங்கி ஏ.டி.எம். செயல்படாது. அனைத்து வங்கிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, டிடி, காசோலையில் எந்த மாற்றமும் இல்லை. வங்கிகள், தபால் நிலையங்கள் நாளை இயங்காது எனவும் மோடி கூறியுள்ளார். திடீரென இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

« PREV
NEXT »

No comments