Latest News

October 11, 2016

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு.
by admin - 0

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கு.
 
Trinco Aid நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கை தமிழ் சங்கம் அமெரிக்காவினுடைய நிதியுதவியில் தமிழரின் குரல் இனை அனுசரணையில் உளவள துறையில் நிபுணத்துவம்  பெற்ற வைத்திய கலாநிதி சிவதாஸ் அவர்களால் இன்றைய தினம் (11.11.2016) பயிற்சி கருத்தரங்கு ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் உயர்தர மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 
 
பாடசாலை மாணவர்களின் இடைவிலகல், மாணவர்களின் தற்போதய போக்கு , வெளிநாட்டு மோகத்தால் கல்வியில் பின்னடைவு, பல்கலைக்கழக தெரிவிலுள்ள மாணவர்களின் வீழ்ச்சி என்பவற்றை நோக்கமாக கொண்டு இக்கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைகழக திருகோணமலை வளாக முதல்வர் பேராசிரியர் கனகசிங்கம் மற்றும் பிரகாஸ் கெனஸ்ரக்ஸன் உரிமையாளர் திரு குகதாஸ் பிரகாஸ் மற்றும் ஹைமாவதி வைத்தியசாலையின் பணிப்பாளர், பொறியியலாளர் திரு. லக்ஸ்சுமணன் சசிகரன், Trinco Aid நிறுவனத்தின் பணிப்பாளரும் மொரவெவ பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தருமான திருமதி. தயாளினி ஹரிகரன் மற்றும் பாடசாலை அதிபர் திரு. சி. .பத்மசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர். 
 
இக் கருத்தரங்கில் சுமார் 75 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கின் முடிவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் இக்கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததுடன் மேலும் இதுபோன்ற கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து தரும்படி வேண்டிக்கொண்டனர். இந்நிகழ்வில் பேராசிரியர் கனகசிங்கம் மற்றும் அதிபருக்கான நினைவு பரிசை Trinco Aid நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி தயாளினி ஹரிகரன் அவர்களாலும் வைத்திய கலாநிதி சிவதாஸ் மற்றும் திரு குகதாஸ் பிரகாஸ் அவர்களுக்கான நினைவு பரிசை பொறியியலாளர் திரு. சசிகரன் அவர்களாலும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் இறுதியில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
 

 

 

 
« PREV
NEXT »

No comments