Latest News

October 23, 2016

ஶ்ரீலங்கா அரச பயங்கரவாதத்திற்கு பலியான யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நீதி கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்
by admin - 0

வணக்கம் அன்பார்ந்த தமிழ் உறவுகளே!
 
கடந்த வியாழன் (20/10/16 )அன்று தாயகத்தில் திட்டமிட்ட முறையில் சிறீலங்கா பொலீசாரால் சுட்டு கொல்லபட்ட இரு யாழ் பல்கலைக்கழக  மாணவர்களின் இழப்பிற்கு நீதி கோரும் முகமாக,இலண்டனில் அமைந்துள்ள சிறீலங்க தூதராலயத்திற்கு முன்பாக மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றினை தமிழீழ நாடுகடந்த அரசின் இளையோர் அமைச்சு எதிர்வரும் செவ்வாய் (25/10/16 )காலை 11 மணி தொடக்கம் மாலை 4மணி வரை முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ளது. தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒருமனதோடு இவ் அறப்போரில் பங்கெடுத்து அநீதிக்கு எதிராக இளையோரால் முன்னெடுக்கும் அறவழி போராட்டத்தை பலப்படுத்துமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

இடம்: Hide park gardens, London W2 2LU

Nearest underground. Lancaster gate

இளையோர் அமைச்சு
நாடு கடந்த தமிழீழ அரசு

மேலதிக தொடர்பிற்கு 
« PREV
NEXT »

No comments