Latest News

September 17, 2016

லண்டனில் இந்திய தூதரகம் முன் ஈழத்தமிழர்கள் ஆர்பாட்டம்
by admin - 0

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து லண்டனில் ஈழத்தமிழர்கள் இந்திய தூதரகம் முன்பாக போராட்டம்

காவிரி நீர் சர்ச்சை தொடர்பில் தமிழர்கள் கர்நாடகாவில் தாக்கப்பட்டமையை கண்டித்தும் இந்த விவகாரத்தில் தமிழ் நட்டு மக்களுடன் தமது ஒற்றுமையை காண்பிக்கும் பொருட்டும் பிரித்தானியா வாழ் ஈழ தமிழ் மக்கள் லண்டனில் இன்று வெள்ளிக்கிழமை இந்திய தூதுவராலயத்தின் முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியதுடன் நாம் தமிழர் கட்சி நேற்று சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தீக்குளித்து இறந்த விக்னேஸுக்கு அஞ்சலி நிகழ்வு ஒன்றையும் நடத்தினர்.

காவிரி நீர் விவகாரம் தொடர்பில் இந்திய உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை மதித்து கர்நாடக அரசாங்கம் நதி நீரை தமிழக மக்களுடன் பகிரவேண்டும் என்றும் இனிமேலும் தமிழர்கள் தாக்கப்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் வலியுறுத்தினர்.






« PREV
NEXT »

No comments