யாழ் தீவகம் சரவணை சின்னமடு மாதா ஆலய நவநாள் திருவிழா கடந்த 27.07.2016 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து விசேட பூஜை வழிபாடுகள் தினமும் இடம்பெற்று வந்ததுடன்-4ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு செபமாலையுடன் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நற்கருணை ஆராதனை இடம்பெற்று- 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு யாழ். மறை மாவட்ட முன்னாள் ஆயர் தோமஸ் சௌந்திரநாயகம் ஆண்டகையின் தலைமையில் திருவிழா திருப்பலி சிறப்பாக இடம்பெற்று பின்னர் அன்னையின் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது.
சின்னமடு அன்னையின் வருடாந்த,பெருநாள் விழாவில் கலந்து கொள்ள-தீவகத்திலிருந்தும்,யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் வருகைதந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments
Post a Comment