Latest News

August 27, 2016

தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரனை காணவில்லை - முறைப்பாடு செய்ய ஆயத்தம்
by admin - 0

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு  வேலுப்பிள்ளை பிரபாகரனை காணவில்லை என முறைப்பாடு செய்ய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


காணாமல் போனோர் அலுவலகத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முறைப்பாட்டை செய்வதற்கு முன்னதாக இது குறித்து தேசியத்தலைவர் பிரபாகரனின் உறவினர்களிடம் பேச உள்ளதாக வட மாகாணசபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்ததில் தேசியத்தலைவர் போன்ற உருவத்தை காட்டி இறந்துவிட்டதாக சிங்களம் நாடகமாடியது ஆனால் தலைவரை பிரபாகரனின் மரண சான்றிதழ் இன்னமும் வழங்கப்படவில்லை என அவர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தலைவர் பிரபாகரனது என கூறப்பட்ட சடலத்தின் மரபணு சோதனை இதுவரையில் நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் காணாமல் போனோர் பட்டியலிலேயே உள்ளடங்குவார் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்

« PREV
NEXT »

No comments