Latest News

August 16, 2016

லண்டனில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் பங்கேற்ற தேர்த் திருவிழா
by admin - 0

லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் பெருந்திரளான பக்தர்களுடன் நேற்று இடம்பெற்ற வருடாந்த ரதோற்சவத்திருவிழா பிரித்தானிய ஊடகங்களில் முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது.

ரதோற்சவ நிகழ்வை பிபிசி ஊடகம் நேற்று நீண்டநேரமாக ஓளிப்பதிவுசெய்திருந்த நிலையில் பிரித்தானியாவில் அதிகம் விற்பகையாகும் நாளிதழான சண் மற்றும் டெயிலி மெயில் ஊடகங்களும் இந்தநிகழ்வுக்கு முக்கியத்துவத்தை வழங்கியுள்ளன.

கண்கவர் ஓளிப்படங்களுடன் இது குறித்த செய்தியை பிரசுரித்துள்ள சண் மற்றும் டெயிலி மெயில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் வியப்பூட்டும் வகையில் இடம்பெற்ற தேர்த்திருவிழா எனவும் தலைப்பிட்டுள்ளது.

உலகெங்குமுள்ள ஆயிரக்கணக்கான இந்து பக்கதர்ளை இந்தவிழா ஈர்த்தாக குறிப்பிட்ட சண் மற்றும் ஆங்கில ஊடகங்கள் நேர்த்திக்கடனுக்காக அலகு மற்றும் செடில் குத்திய நிலையில் காவடிஎடுத்த பக்தர்கள், பாற்குடம் எடுக்கும் பக்தைகள், அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் உட்பட ரதோற்சவ நிகழ்வின் ஒளிப்படங்களையும் பிரசுரித்துள்ளது.

பிபிசி ஊடகம் நேற்று ட்ரோன் கமரா முதலான கருவிகளை பயன்படுத்தி முத்தேர் பவனியை நீண்டநேரமாக ஓளிப்பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,சண் இதழின் இணையப்பதிப்பில் இதுதொடர்பாக வெளியான செய்திகளுக்கு பின்னூட்டம் வழங்கிய சிலர் ரதோற்சவ நிகழ்வு குறித்து எதிர்மறையான விமர்சனங்களையும் பதிவுசெய்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments