Latest News

July 20, 2016

தீவகம் வேலணை வங்களாவடியில்,பெண்களுக்கான இலவச கணனி பயிற்சி நிலையம்
by admin - 0

யாழ் தீவகம் வேலணை வங்களாவடிச் சந்தியில்,பெண்களுக்கான இலவச கணனி பயிற்சி நிலையம் ஒன்று – கடந்த (15/07/2016) வெள்ளிக்கிழமை அன்று  காலை 9 மணிக்கு, வேலணை பிரதேச செயலர் திருமதி சுகுணரதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்பயிற்சி நிலையத்திற்கான, நிதியினை பிரித்தானியாவில் இயங்கும் வேலணை ஒன்றியம் வழங்கியிருந்ததாக மேலும் தெரிய வருகின்றது.

இந்நிகழ்வில்,வேலணை பிரதேச செயலர் திருமதி சுகுணரதி அவர்கள் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டதுடன்-மேலும் ஊர்ப்பெரியவர்கள்-பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments