- பெண் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது
- செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்
- பொறியியல் பட்டதாரியான ராம்குமார் கொலை செய்ததாக ஒப்புதல் - காவல்துறை
சென்னை: பெண் பொறியாளர் சுவாதி படு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ராம்குமார் என்பவரை நெல்லையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதியின் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, கொலையில் தொடர்புடைய செங்கோட்டையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ராம்குமார் என்பவர் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டார்.
செங்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் ராம்குமாரை போலீசார் சுற்றி வளைத்தபோது, அவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையோ ராம்குமாரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். பின்னர் செங்கோட்டையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவாதியை கொலை செய்ததாக ராம்குமார் ஒப்புகொண்டதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments
Post a Comment