Latest News

July 23, 2016

ஜெர்மனி துப்பாக்கிச் சூடு : 10 பேர் பலி, மர்ம நபர் தற்கொலை
by admin - 0

ஜெர்மனியின் முனிச் நகரில் நேற்றிரவு மர்ம நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதோடு 21 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ள நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸ் உயரதிகாரி ஹ_பர்டஸ் ஹென்டிரே விளக்கமளிக்கையில்,

வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் தாக்குதல் நடத்தியவனும் ஒருவன். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் 18 வயதான ஜெர்மன்-ஈரானை சேர்ந்தவர். இந்த தாக்குதலுக்கான நோக்கம் என்னவென்று சரியாக தெரியவில்லை.

வணிக வளாகத்திற்குள் நுழைவதற்கு முன் மெக்டனோல்ட் உணவு விடுதியில் அவர் தாக்குதல் நடத்தி உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலை அடுத்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

தற்கொலை

ஜெர்மனி நாட்டில், முனிச் நகரில் அமைந்துள்ள ஒலிம்பியா வணிக வளாகத்தில் புகுந்த துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள், அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இச்சம்பவத்தில் 9 பேர் பலியானதாகவும், துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டவன் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னதாக இத்தாக்குதலில் குறைந்தபட்சம் மூன்று பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர், ஜெர்மனில் முனிச் நகரில் வசித்த இரான் வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், 18 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்


« PREV
NEXT »

No comments