Latest News

June 12, 2016

ஆட்சி மாறிய போதும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் மாறவில்லை! சஹாப்தீன்
by admin - 0

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யா­கவும், ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமராகவும் இருக்­கின்ற இன்­றைய அர­சாங்­கத்­திற்கு தேசிய அர­சாங்கம் என்றும், நல்­லாட்சி அர­சாங்கம் என்றும் பெயர்­களை சூட்­டி­யுள்­ளனர். இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­க­ளாக இருக்­கின்­றன. இவ்­விரு கட்­சி­களும் தங்­க­ளி­னால்தான் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­தென்று சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றன. தேசிய அர­சாங்கம், நல்­லாட்சி, பங்­கா­ளிகள் என்று அழ­காக பேசிக் கொண்­டாலும் முஸ்­லிம்­க­ளினால் நிம்­ம­தி­யாக வாழக் கூடிய சட்ட அமு­லாக்கம் நாட்டில் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

முஸ்­லிம்­களின் மீதான கெடு­பி­டி­களும், நெருக்­கு­வா­ரங்­களும் நாளுக்கு நாள் அதி­க­ரித்துக் கொண்­டி­ருக்­கின்­றன. முஸ்­லிம்­களின் மீது இன­வாத அமைப்­புக்­க­ளினால் திட்­ட­மிட்­ட­வாறு மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற அநியாய செயற்­பா­டு­க­ளை­யிட்டு அர­சாங்­கமோ, பங்­காளிக் கட்­சி­களோ பெரி­தாக கவலை கொள்­வ­தாகத் தெரி­ய­வில்லை. பங்­காளிக் கட்­சிகள் அர­சாங்­கத்தின் நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­பட்டு விடக் கூடா­தென்­பதில் எடுத்துக் கொள்ளும் அக்­க­றையும், ஆர்­வமும் முஸ்லிம் சமூ­கத்தின் மீதான விரோத செயற்­பா­டு­களில் காட்­டு­வ­தில்லை.

மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்­சியை வீழ்த்த வேண்­டு­மென்­பதில் முஸ்­லிம்கள் பெரும் குறி­யாக இருந்­தார்கள். நாட்டில் விலை­வாசி அதி­க­ரித்துக் கொண்டு செல்­கின்­றது. குடும்ப ஆட்சி நடை­பெ­று­கின்­றது. 

ஊழல்கள் நிறைந்­துள்­ளன என்­ப­தற்­காக மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்­சியை மாற்ற வேண்­டு­மென்று முஸ்­லிம்கள் துணி­ய­வில்லை. முஸ்­லிம்­களின் மீது திட்­ட­மி­டப்­பட்ட வகையில் இன­வாத அமைப்­புக்­களால் முஸ்­லிம்­களின் மத­வி­ழு­மி­யங்­களில் தேவை­யற்­ற­வாறு, நீதிக்குப் புறம்­பாக முஸ்­லிம்கள் என்ற ஒரே­யொரு கார­ணத்­திற்­காக தலை­யீ­டு­களைச் செய்­தன. முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டன. பள்­ளி­வா­சல்­க­ளுக்குள் பன்­றியின் மாமிசம் மற்றும் இரத்தம் வீசப்­பட்­டன. குர்ஆன் தீயிட்டு கொளுத்­தப்­பட்­டது. முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் தாக்­கப்­பட்­டன. முஸ்­லிம்­களின் வியா­பார நிலை­யங்­களில் பொருட்­களை கொள்­வ­னவு செய்யக் கூடா­தென்று கேட்­கப்­பட்­டன. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முக்­கிய நக­ரங்­களில் ஆர்ப்­பாட்­டங்கள் நடை­பெற்­றன. இவைகள் போதா­தென்று அளுத்­கம, பேரு­வளை, தர்கா நகர் பிர­தே­சங்­களில் முஸ்­லிம்கள் மீது பகி­ரங்­க­மாக தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இவை போன்ற கார­ணங்­க­ளுக்­கா­கவே முஸ்­லிம்கள் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்று தீர்­மா­னித்து மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வாக்­க­ளித்­தார்கள்.

முஸ்­லிம்கள் எதிர்­பார்த்­த­வாறு ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு நாட்டில் நல்­ல­தொரு சூழல் இன்­றைய அர­சாங்­கத்தின் ஆரம்­பத்தில் காணப்­பட்­டது. ஆனால், அந்­நிலை படிப்­ப­டி­யாக குறை­வ­டைந்து கொண்டு வந்து மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்சிக் காலத்தை நினை­வு­ப­டுத்­து­வது போன்று முஸ்­லிம்­களின் மீது நெருக்­க­டிகள் ஏற்­ப­டுத்­தப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இதனால், பேரு­வளை, அளுத்­கம, தர்கா நகர் போன்ற இடங்­களில் நடை­பெற்­ற­தனைப் போன்று இன்­னு­மொரு இடத்தில் முஸ்­லிம்­களின் மீது பகி­ரங்க தாக்­கு­தல்கள் நடை­பெ­றுமா என்ற அஞ்ச வேண்­டி­ய­வர்­க­ளாக முஸ்­லிம்கள் உள்­ளார்கள்.

வதந்தி

தற்­போது அடங்கி, ஒடுங்கி இருந்த இன­வாத அமைப்­புக்கள் மீண்டும் தங்­களின் குணங்­களை வெளிப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன. கண்டி – மட­வளை பகு­தி­யி­லுள்ள மிகவும் பிர­பல்யம் வாய்ந்­த­தொரு முஸ்லிம் பாட­சா­லையில் சிங்­கள ஆசி­ரி­யர்­களும் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இன­வாதம், மத­வாதம், மொழி­வாதம் போன்ற எந்த வேறு­பா­டு­களும் இல்­லாமல் அங்கு கட­மை­யாற்றிக் கொண்­டி­ருக்கும் ஆசி­ரி­யர்கள் தமது ஒற்­று­மையை வெளிக்­காட்டிக் கொண்­டி­ருந்­தார்கள். அதி­பரின் இட­மாற்றம் தொடர்பில் ஏற்­பட்ட சர்ச்­சையை பயன்­ப­டுத்திக் கொண்ட இன­வா­திகள் சிங்­கள ஆசி­ரியர் ஒரு­வ­ருக்கு ஜிஹாத் என்ற பெயரில் கடி­த­மொன்­றினை அனுப்­பி­யுள்­ளார்கள். இதனால், சிங்­க­ள­வர்கள் மத்­தியில் முஸ்­லிம்­க­ளிடம் ஜிஹாத் என்ற அமைப்­புள்­ள­தென்று காட்டி முஸ்­லிம்­க­ளுக்கும், சிங்­க­ள­வர்­க­ளுக்கும் இடையே மோதல்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டது. இக்­க­டிதம் போலி என்றும், ஜிஹாத் அமைப்பு உள்­ள­ தென்­பது வதந்தி என்றும் நிரூ­பிக்­கப்­பட்­டது. இவ்­வி­டயம் பற்றி சி.ஐ.டியினர் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளார்கள்.

பாட­சாலை கட்­ட­டத்­திற்கு எதிர்ப்பு

வெலி­ம­டையில் நகரில் அமைந்­துள்ள முஸ்லிம் மகா­வித்­தி­யா­ல­யத்தின் கனிஷ்ட பிரி­வினை தம்­ப­வின்ன என்னும் இடத்­திற்கு மாற்­று­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­தது. இதற்­கான காணியை கல்வி அமைச்சு ஒதுக்­கி­யி­ருந்­தது. இதற்­க­மைய தம்­ப­வின்­னவில் வெலி­மடை முஸ்லிம் மகா­வித்­தி­யா­ல­யத்தின் கனிஷ்ட பிரி­விற்­கான கட்­டடத்­திற்கு அடிக்கல் நடு­வ­தற்­காக ஊவா மாகாண சபை முத­ல­மைச்சர் வருகை தந்த போது பிக்­கு­களின் தலை­மை­யி­லான ஒரு குழு­வினர் இவ்­வி­டத்தில் இப்­பா­ட­சாலை அமைக்க இட­ம­ளிக்க மாட்டோம் என்று ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டார்கள். இதனால், அடிக்கல் நடும் வைபவம் இரத்துச் செய்­யப்­பட்­டது.

தெஹி­வளை பள்­ளி­வாசல்

தெஹி­வளை பாத்யா மாவத்­தையில் உள்ள முஸ்லிம் பள்­ளி­வா­சலை காணியின் எல்­லைக்­குள்­ளேயே விஸ்­த­ரிப்­ப­தற்கும், பள்­ளி­வா­சலின் கட்­ட­டத்தில் காணப்­படும் உடை­வு­க­ளையும், சிதை­வு­க­ளையும் திருத்தி அமைப்­ப­தற்கும் இப்­பள்­ளி­வா­சலின் நிர்­வா­கிகள் தீர்­மா­னித்­தார்கள். இதற்­காக கல்­கிஸை மாந­கர சபையில் முறை­யாக அனு­மதி பெற்றுக் கொள்­ளப்­பட்டு மேற்­படி வேலை­களை தொடங்­கிய போது, இன­வாத அமைப்­பினர் பள்­ளி­வா­சலின் விஸ்­த­ரிப்­புக்கும், திருத்த வேலை­க­ளுக்கும் எதி­ராக கிளர்ந்­தெ­ழுந்­தார்கள். ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டார்கள். இதனால், பொலிஸார் பள்­ளி­வா­சலில் மேற்­கொள்­ளப்­பட்ட திருத்த வேலை­களை இடை­நி­றுத்தி வைத்­துள்­ளார்கள்.

பள்­ளி­வாசல் அமையப் பெற்­றுள்ள இடத்தில் முஸ்­லிம்கள் குறை­வாக உள்­ளார்கள். ஆதலால், பள்­ளி­வா­சலை விரி­வு­ப­டுத்த வேண்­டி­ய­தில்லை என இன­வா­திகள் தெரி­வி­கின்­றார்கள். ஆனால், இப்­பள்­ளி­வாசல் இங்­குள்ள முஸ்­லிம்­க­ளுக்கே தொழு­வ­தற்கு இட­வ­சதி குறை­வா­க­வுள்­ளது. பள்­ளி­வா­சலை நாட்டின் சட்­டத்­திற்கு அமைய விரி­வு­ப­டுத்­து­வ­தனை முஸ்­லிம்­கள்தான் தீர்­மா­னிக்க வேண்டும். அதனை மாற்று இனத்­தினர் தீர்­மா­னிக்க முடி­யாது. இது முஸ்­லிம்­களின் மத உரி­மை­யுடன் தொடர்­பு­பட்­டது. இதேவேளை, முஸ்­லிம்கள் குறை­வா­க­வுள்­ளார்கள்.

அதனால் பள்­ளி­வா­சலை விரி­வு­ப­டுத்த முடி­யா­தென்றால், வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் பல இடங்­களில் சிங்­க­ள­வர்கள் மிகவும் குறை­வாக உள்ள இடங்­க­ளிலும், சிங்­க­ள­வர்கள் இல்­லாத இடங்­க­ளிலும் பெரிய அளவில் பௌத்த விகா­ரைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. மேலும், முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் இடங்­களில் புத்­தரின் சிலைகள் அமைக்­க­ப்பட்­டுள்­ளன. ஆயினும், முஸ்­லிம்கள் இதற்கு எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை. 

முஸ்­லிம்கள் பௌத்­தர்­களின் மத உரி­மையை மதிப்­பது போன்று பௌத்­தர்கள் முஸ்­லிம்­களின் மத உரி­மையை மதிக்க வேண்டும். கடந்த ஆட்­சி­யிலும் இது போன்ற சம்­ப­வங்கள் இடம்­பெற்­ற­போது அர­சாங்கம் இன­வா­தி­க­ளுக்கு அடங்­கி­யது. சட்­டத்தை கைகளில் எடுத்துக் கொண்­ட­வர்­களை சுதந்­தி­ர­மாக நட­மாட அனு­ம­தித்­தது. இது போலவே இன்­றைய அர­சாங்­கத்­திலும் சட்­டத்தை கைகளில் எடுத்துக் கொண்­டி­ருக்கும் ஒரு சில இன­வாத அமைப்­புக்­க­ளுக்கு அர­சாங்கம் அடி­ப­ணிந்து கொண்­டி­ருக்­கின்­றது. தெஹி­வளை பள்­ளி­வா­சலின் விஸ்­த­ரிப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக இன­வா­திகள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­வ­தனைப் போன்று முஸ்­லிம்கள் ஒரு பௌத்த விகா­ரையின் விஸ்­த­ரிப்­புக்கு எதிர்ப்புக் காட்­டி­யி­ருந்தால் அவர்கள் கைது செய்­யப்­பட்­டி­ருப்­பார்கள்.

முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு சட்­டமும், பௌத்­தர்­க­ளுக்கு ஒரு சட்­டமும் இருக்க முடி­யாது. யாருக்கும் அடி­ப­ணிந்து செல்­லா­ததே சட்­ட­மாகும். சட்டம் ஒரு இனத்­திற்கோ அல்­லது ஒரு குழு­விற்கோ அடி­ப­ணிந்து விடு­மாயின் அங்கு சட்­ட­வாட்­சிக்கு பதி­லாக பேய்­களின் ஆட்­சியே நீடிக்கும்.
« PREV
NEXT »

No comments