Latest News

May 24, 2016

கடல்நீரில் விளக்கெரியும் புதுமை மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடார்ந்த உற்சவம்
by admin - 0




கடல்நீரில் விளக்கெரியும் வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் ஆலய வருடார்ந்த உற்சவம் இன்று அதிகாலை ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. நாட்டின் பலபாகங்களிலிருந்தும் பக்தர் கூட்டம் படைபெடுத்தபடியுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடார்ந்த உற்சவங்கள் இன்று அதிகாலை 4.00 மணியளவில் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மடைப்பண்டம் எடுத்து வரப்பட்டு விசேட பூசை வழிபாடுகளுடன் இன்று காலை உற்சவம் சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

ஈழத்தில் கண்ணகி அம்மன் வழிபாட்டுக்கு சிறப்பு மிக்க தலமாக முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயம் பல புதுமைகளையும் அற்புதங்களையும் கொண்டு காணப்படுகின்றது.

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தின் உற்சவ காலங்களில் முல்லைத்தீவுக் கடலில் எடுக்கப்பட்ட கடல் நீரில் ஒரு வாரத்திற்கும் மேலாக விளக்கு எரிக்கப்படுவது புதுமை மிக்க அர்ப்புதமாகக் காணப்படுகின்றது.
பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் நோக்குடன் தூக்குக்காவடி, பறவைக்காவடி, ஆட்டக்காவடி, பாற்செம்பு, அங்கப்பிரதஸ்டனை போன்ற பல வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இன்று அதிகாலை ஆரம்பமான வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தின் உற்சவம் இரவிரவாக சிறப்பு மிக்க பூசை வழிபாடுகள் என்பன நடைபெற்று நாளை வரை சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
« PREV
NEXT »

No comments