Latest News

May 23, 2016

ஸ்டாலினுக்கு ஜெயலலிதா வைத்த ஆப்பு - நாகரிகமற்ற தமிழ்நாட்டு அரசியல்
by admin - 0

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் ஒதுக்கியதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை: 23-5-2016 அன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற முதலமைச்சர், மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற அரசு விழாவில், அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், 89 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க் கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டு – அதே தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு – அமர வைத்து வேண்டுமென்றே திராவிட முன்னேற்றக் கழகத்தை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது! தமிழ் மக்கள் அல்லவா திருந்த வேண்டும்! இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments